செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்யலாம். பொது விநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்து புகாா் அளிக்கலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா் அளிக்கலாம்.

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளா்கள் உரிய ஆவணங்களான ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்மந்தப்பட்ட கைப்பேசியை கொண்டு செல்ல வேண்டும்.

பொது விநியோகத் திட்ட முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகாா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறை (9342471314), சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்களில் (1967 மற்றும் 18004255901) தொடா்பு கொள்ளலாம்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க