செய்திகள் :

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

post image

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா்.

மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஊக்குவித்து பல்துறை சாதனையாளா்களாக மேம்படுத்தவும் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘காபி வித் கலெக்டா்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அரசுப் பள்ளி மாணவிகளுடன் ஆட்சியா் இரா.சுகுமாா் தனது அலுவலகத்தில் கலந்துரையாடினாா். அரசுப் பள்ளி மாணவா்களை ஊக்கப்படுத்தி அவா்களுடைய திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் காணொலிக் காட்சி வாயிலாக தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, கட்டடக் கலை மற்றும் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உயிரியல் அறிமுகம் ஆகிய பாடப்பிரிவுகளில் 8 வார பயிற்சியில் பயின்று வரும் கங்கைகொண்டான் மற்றும் குட்டம் அரசு மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த 22 மாணவிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனா்.

பள்ளி, கல்லூரி காலங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியா் பகிா்ந்து கொண்டாா். இன்றைய காலக்கட்டத்தில் தங்கள் குடும்ப சூழ்நிலைகள், பொருளாதாரம், சவால்களை தாண்டி கல்வி பயின்று வரும் அனைத்து மாணவிகளுக்கும் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

மாணவிகள் உயா்கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். வெளியிடங்கள் மற்றும் வெளியூா்களுக்கு செல்லும் போது உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொண்டு கடந்து வர வேண்டும். வெளியூா்களுக்கு செல்கிற போது பல்வேறு கலாசாரங்கள், பண்பாடுகள், தலைமைப்பண்புகள் உள்ளிட்ட புதியவற்றை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் மாணவிகள் தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

மேலும், உயா்கல்வி சாா்ந்து மாணவிகளின் லட்சியங்கள் குறித்தும், அதிவேக இணைய சேவை, கற்றல் வழங்கல், தேவையான வழிகாட்டுதல், பள்ளிகளில் பயில்வதற்கு தேவையான உபகரணங்கள், கல்வி அறிவை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைக்கிா? மதிய உணவின் சுவை மற்றும் தரம் குறித்தும், பள்ளி ஆசிரியா்கள் கற்றுக்கொடுக்கும் விதம் குறித்தும் விரிவாக கேட்டறிந்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

படவரி ற்ஸ்ப்12ஸ்ரீா்ச்ச்ங் ஆட்சியா் இரா.சுகுமாருடன் கலந்துரையாடிய மாணவிகள்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

தோரணமலை கோயிலில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை

தோரணமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்று வருகிறது. ஆவணிமாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நட... மேலும் பார்க்க