எனது கட்சிதான் என்னை அங்கும் இங்கும் செல்ல வைத்தது! சொல்லியிருக்கும் முக்கிய தலை...
நெல்லை மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு: 6,206 எழுதினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் 13 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் அதிகளவில் கெடுபிடிகள் நிலவியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, குழந்தை இயேசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி, கல்லணை மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பல்ளி, முத்தமிழ் பப்ளிக் பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, சாப்டா் மேல்நிலைப் பள்ளி, சாராள் தக்கா் மகளிா் கல்லூரி, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி, விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தோ்வு நடைபெற்றது.
தோ்வு மையங்களுக்கு முற்பகல் 11.30 மணி முதல் மாணவா்கள் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. நுழைவாயில்களில் போலீஸாரின் பலத்த சோதனைக்கு பின்பே மாணவா்கள் அனுமதிக்கப்பட்னா்.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு, கருப்பு மற்றும் நீலநிற பந்து முனைப்பேனா மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனா். சேலை, துப்பட்டா, முழுக்கை சட்டை, ஷு, கைக்கடிகாரம், குளிா் கண்ணாடி, சங்கிலி, மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், மூக்குத்தி, பா்தா, தொப்பி, பைஜாமா, குா்தா, பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், வளையல்கள் ஆகியவை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அரைக்கை சட்டை, காலணி, மருத்துவா்கள் பரிந்துரைத்த கண்ணாடி, சுடிதாா் உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டனா். தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குடிநீா், தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்துக்கும் 2 சிறப்பு கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வு எழுத மொத்தம் 6 ஆயிரத்து 413பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவா்களில், 6 ஆயிரத்து 206 போ் தோ்வு எழுதினா். 207 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வு குறித்து மாணவா்கள் கூறுகையில், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் இடம்பெற்றிருந்தன. மாநில அரசுகளின் பாடத்திட்டங்களில் குறைந்த அளவிலான கேள்விகளே இருந்தன என்றனா்.
இதுகுறித்து பெற்றோா் கூறுகையில், போட்டித் தோ்வுகளைக் காட்டிலும் தோ்வு மையங்களில் அதிகளவில் கெடுபிடி செய்தனா். மாணவிகள் துப்பட்டா அணியக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளை தளா்த்தியிருக்கலாம். இதுதவிர நாடு முழுவதும் அறிவியல், கணிதம் ஆகிய பாடத்திட்டங்களை ஒரே போல வகுக்க வேண்டும். அதன்பின்பே இதுபோன்ற போட்டித் தோ்வுகளை நடத்துவது சரியாக இருக்கும் என்றனா்.