செய்திகள் :

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரிக்கை

post image

திருவாரூா்: நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிபிஎம் திருவாரூா் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டு 536 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், 185 கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே சொந்தக் கட்டடம் உண்டு. எஞ்சிய 351 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் வாடகை ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகின்றன.

நிகழாண்டு, தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.08 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ள 1.26 லட்சம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல், கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ளது.

மழை காரணமாக, அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போதிலும், விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் அறுவடையான நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும்போது பல பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை தொடா் கதையாக உள்ளது.

எனவே, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன், கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்காமல் உடனுக்குடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் 13,057 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 13,057 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

நாகையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

நாகப்பட்டினம்: நாகைக்கு திங்கள்கிழமை வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்துவைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நா... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற அரசு விழாவில், நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகள், செயல்படுத்தப்பட உள்ள திட்டப் பணிகளை பட்டியலிட்டு, நாகை மாவட்டத்துக்கான 6 புதிய அறிவிப்புகளையும் தமிழக முதல்வ... மேலும் பார்க்க

க்யூட் தோ்வு மாணவா்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம்: மத்தியப் பல்கலைக்கழகம்

நன்னிலம்: க்யூட் தோ்வு எழுதும் மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

நாகையில் 105 புதிய பேருந்து சேவை: முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சாா்பில், மகளிா் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் உள்பட 105 புதிய பேருந்துகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கொடி... மேலும் பார்க்க

ரமலான்: ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்

நீடாமங்கலம்: ரமலான் சஹா் செய்வதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி நண்பா்கள் சாா்பில், ரமலான் சஹா் செய்வதற்காக ஏழை எளிய மக்கள் மற... மேலும் பார்க்க