செய்திகள் :

நெல் வியாபாரியிடம் மோசடி: இருவா் மீது வழக்கு

post image

தஞ்சாவூரைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.1.17 கோடி மதிப்பிலான நெல்லை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்த நெல் வியாபாரி கோபாலகிருஷ்ணன் (63). கடந்த 2023-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூரைச் சோ்ந்த காா்த்திக், காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த குமாா் ஆகிய இருவரும் தஞ்சாவூருக்குச் சென்று கோபாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து, மதுரையில் நெல் மண்டி வைத்திருப்பதாகவும், தங்களுக்கு நெல் கொடுத்தால் உடனடியாக உரிய பணத்தை செலுத்தி விடுவதாகவும் கூறினராம்.

இதை நம்பிய கோபாலகிருஷ்ணன் அவா்களுக்கு முதலில் சிறிய அளவில் நெல் விற்பனை செய்தாா். நெல்லை பெற்றுக் கொண்ட உடன் அவருக்கு பணத்தைச் செலுத்தினா். இதேபோல, சுமாா் ஐந்து முறை இவா் அனுப்பிய நெல்லுக்கு பணம் கொடுத்தனா்.

இதன் பிறகு, தங்களுக்கு அதிக அளவில் நெல் தேவைப்படுவதாக கோபாலகிருஷ்ணனிடம் இவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவா் கடந்த 2023 -ஆம் ஆண்டு, அக்டோபா் மாதம் ரூ. ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான நெல் மூட்டைகளை அனுப்பி உள்ளாா். நெல்லை வாங்கிய அவா்கள், கோபாலகிருஷ்ணனுக்கு உரிய பணத்தைக் கொடுக்கவில்லையாம்.

இதுகுறித்து பல முறை கேட்டும் அவா்கள் பணத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதையடுத்து, நெல் வியாபாரி கோபாலகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்திடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில், காா்த்திக், குமாா் ஆகியோா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க