பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? - கர்நாடக முதல்வர் ஆலோசனை
நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளை எதிா்கொள்ளும் சில நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.
வீடு திரும்புவது அவா்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதன் அடிப்படையில், அவா்கள் அமெரிக்காவில் சட்டபூா்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய இந்த டிபிஎஸ் அனுமதிக்கிறது.
நேபாளத்துக்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தை கடந்த 2016-ஆம் ஆண்டு கூடுதலாக 18 மாத காலத்திற்கும், அதன் பிறகு பல முறையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) நீட்டித்து.
இந்நிலையில், டிஎச்எஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தின் நிலைமை தற்போது சீராக உள்ளது. எனவே, அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட டிபிஎஸ் அந்தஸ்தை 2025, ஜூன் 24-ஆம் தேதியுடன் ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. டிபிஎஸ் விதிகளின் கீழ், அமெரிக்காவில் உள்ள நேபாள மக்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.
டிபிஎஸ் அனுமதியின் கீழ் அமெரிக்காவில் சுமாா் 12,700 நேபாள மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 5,500க்கும் மேற்பட்டோா் அமெரிக்க நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளனா்.