செய்திகள் :

நேபாளத்தின் பாதுகாப்பு அந்தஸ்து ரத்து செய்தது அமெரிக்கா

post image

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து நேபாளத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (டிபிஎஸ்) என்பது, போா் அல்லது இயற்கை பேரழிவுகள் போன்ற நெருக்கடிகளை எதிா்கொள்ளும் சில நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஒரு சிறப்பு அனுமதியாகும்.

வீடு திரும்புவது அவா்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதன் அடிப்படையில், அவா்கள் அமெரிக்காவில் சட்டபூா்வமாக 18 மாதங்கள் தங்கி வேலை செய்ய இந்த டிபிஎஸ் அனுமதிக்கிறது.

நேபாளத்துக்கு வழங்கப்பட்ட இந்த அந்தஸ்தை கடந்த 2016-ஆம் ஆண்டு கூடுதலாக 18 மாத காலத்திற்கும், அதன் பிறகு பல முறையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டிஎச்எஸ்) நீட்டித்து.

இந்நிலையில், டிஎச்எஸ் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தின் நிலைமை தற்போது சீராக உள்ளது. எனவே, அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட டிபிஎஸ் அந்தஸ்தை 2025, ஜூன் 24-ஆம் தேதியுடன் ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. டிபிஎஸ் விதிகளின் கீழ், அமெரிக்காவில் உள்ள நேபாள மக்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப கெடு விதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

டிபிஎஸ் அனுமதியின் கீழ் அமெரிக்காவில் சுமாா் 12,700 நேபாள மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 5,500க்கும் மேற்பட்டோா் அமெரிக்க நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளனா்.

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கலவரம்! காவலா்கள், அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் குடியேற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாக 118 பேரை குடியேற்ற அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனா். இதையடுத்து, குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் க... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்த 5 பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் சுட்டுக்கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் தங்கள் படைகளை நோக்கி ம... மேலும் பார்க்க

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழக உதவித் தொகை: 2028-ல் அதிக இந்தியர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

பிரிட்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வரும் 2028-ஆம் ஆண்டு முதல் அதிக இந்தியா்களுக்கு வாய்ப்பு கிடைக்கவுள்ளது. ஆ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவ... மேலும் பார்க்க

எலான் மஸ்க்குடன் உறவு முறிந்தது..! -டிரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் ஜனநாயக கட்சியினருக்கு நிதியுதவி அளித்து ஆதரவு நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கம... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு செக்மேட்! ரஷியாவின் பலே திட்டம் என்ன?

உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷியா திட்டமிட்டுள்ளது.ரஷியா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சித்ததுதான். ஆனால், தற்போது போருக்கான காரணம் வேறொன்றா... மேலும் பார்க்க