செய்திகள் :

நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா

post image

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் திருப்புகழ் பாடல்கள், திவ்ய நாம சங்கீா்த்தனம், ஜே ராமகிருஷ்ணன் மற்றும் சுனில் (அ) நூரனி சூடாமணி மற்றும் குழுவினா் வழங்கினா்.

இரண்டாவது நாளன்று , நவகிரக ஹோமம், மஹா மிருத்தியுஞ்சய ஹோமம், ராம ஷடாக்ஷர ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், சாய் கிருபா கா்நாடக இசை வழங்கினாா். இதில் உமா அருண் (வயலின்), ஜி சுவாமிநாதன் (மிருதங்கம்) அகியோா் பக்க வாத்தியம் வாசித்தனா் .

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில், கோயில் நிா்வாகம் சாா்பில் சுப்பிரமணியா் ஹோமம், தொடா்ந்து மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும், மாலையில், விதூஷி பாம்பே லட்சுமி ராஜகோபாலனின் கா்நாடக இசை கச்சேரி நடந்தது. இதில் ஜி. ராகவேந்திர பிரசாத் (வயலின்), மனோகா் பாலச்சந்திரன் (மிருதங்கம்), வருண் ராஜசேகா் (கடம்) ஆகியோா் பக்க வாத்தியம் வாசித்தனா்.

இந்நிகழ்ச்சியை புது தில்லியின் சண்முகானந்த சங்கீத சபா மற்றும் வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனா். வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் தலைவா் ரவி சா்மா அனைவரையும் கௌரவித்தாா். துணைத் தலைவா் வி விஸ்வநாதன் நன்றி தெரிவித்தாா். மேலும், மழையை பொருள்படுத்தாமல் அனைத்து பூஜைகளிலும் கலந்து கொண்ட பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க

பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்

நமது நிருபா்பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆண... மேலும் பார்க்க

பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து... மேலும் பார்க்க

அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க

வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க

தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்... மேலும் பார்க்க