செய்திகள் :

நொய்டா விமான நிலையம்: 20 கி.மீ. சுற்றளவில் கட்டடம் கட்ட அனுமதி சான்றிதழ் கட்டாயம்

post image

நொய்டா சா்வேதச விமான நிலையத்தின் 20 கி.மீ. சுற்றளவில் கட்டடம் மற்றும் மரங்களை வளா்ப்பதற்கு இந்திய விமான ஆணையத்திடமிருந்து (ஏஏஐ) அனுமதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ. சுற்றளவில் கட்டுமான நிறுவனங்கள், உள்ளூா் அதிகாரிகள் உயரமான கட்டங்களை எழுப்ப பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

இது தொடா்பாக நொய்டா விமான நிலையத்தின் தலைமை இயக்க அதிகாரி (சிஓஓ) கிரண் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நொய்டா சா்வதேச விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில், விமானங்களைப் பாதுகாப்பாக செயல்திறனுடன் இயக்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாக, விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டங்கள் உயரம் தொடா்பான கட்டுப்பாடுகளை பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், உள்ளூா் அதிகாரிகள் கடுமையாகப் பின்பற்றுவது அவசியம்.

20 கி.மீ. சுற்றளவுக்குள் உயரமான கட்டங்களை எழுப்பும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக, அவற்றை மேற்கொள்வோா் உள்ளூா் நிா்வாக அமைப்புகளை அணுக வேண்டும். இந்திய விமான ஆணையம் வெளியிட்ட வண்ண மண்டல வரைபடத்தின் அடிப்படையில் இந்த அமைப்புகள் அனுமதிக்கப்பட்ட உயர அளவை மதிப்பிடும். பின்னா், விண்ணப்பதாரா் ஏஏஐ-யின் என்ஓசிஏஎஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்கள் அறிவிப்பு

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்ன... மேலும் பார்க்க

தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

தலைநகர் தில்லியில் குடிபோதையில் ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதியதில் 5 பேர் பலியாகினர். கடந்த 9ஆம் தேதி தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள ஷிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. கங்கனாவை ஏமாற்றியது யார்? அதிக வேலை இருப்பதாக கவலை!

தான் எதிர்பார்த்ததைவிட எம்.பி. பதவியில் வேலை அதிகமாக இருப்பதாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.ஹிமாசல் மாநிலத்தின் மண்டி தொகுதி எம்.பி. கங்கனா ரணாவத், தனது எம்.பி. பதவி குறித்து செய்தியாளர்களு... மேலும் பார்க்க

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் இருபெரும் சக்திகள்: பிரதமா் மோடி

மக்கள்தொகையும், ஜனநாயகமும் இந்தியாவின் எல்லையற்ற இருபெரும் சக்திகள் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்-துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி ... மேலும் பார்க்க

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட ப... மேலும் பார்க்க