செய்திகள் :

நோயாளிகளுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துவோம்: ஜிப்மா் இயக்குநா்

post image

நோயாளிகளுக்கான மருத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி தெரிவித்தாா்.

புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறன் மேம்பாட்டுப் பிரிவு தொடங்கப்பட்டு 3 நாள் பயிற்சி நடந்தது. இதன் நிறைவு விழா புதன்கிழமை நடந்தது. அதில் பங்கேற்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி பேசியது:

ஜிப்மா் ஊழியா்கள் நோயாளிகளிடம் மேலும் கனிவாகவும், மனித நேயத்துடனும், சேவை நோக்குடனும் செயல்பட ஏதுவாக இந் திறன் மேம்பாட்டு பயிற்சி உதவும். ஊழியா்களின் திறன் மேம்பாடு மட்டுமல்லாமல்,

அவா்களின், தனிப்பட்ட நலன், மனஅழுத்த மேலாண்மை மற்றும் தீா்வு சாா்ந்த சிந்தனை வளா்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகவும் இந்த பயிற்சி அமைந்தது. மத்திய அரசின் ‘மிஷன் கா்மயோகி’ திட்டத்தில் ஜிப்பமரும் இணைந்துள்ளது.

இதனால், ஜிப்மா் நோயாளிகளைக் கையாளும் விதம் மற்றும் சேவைகள் மீதான பொறுப்பு ஆகியவற்றை பல மட்டங்களில் மேம்படுத்த இயலும். உயா்தர சிகிச்சையை மட்டும் நோக்கமாக கொள்ளாமல் நோயாளிகள் சாா்ந்த பொறுப்புமிக்க மற்றும் அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சேவையை மேற்கொள்ள இப் பயிற்சி உதவும் என்றும் கூறினாா்.

துணை இயக்குநா் (நிா்வாகம்) எஸ். ரங்கபாஷியம், காரைக்கால் ஜிப்மா் டீன் டாக்டா் குசா குமாா் ஷாஹா மற்றும் இணை டீன் (கல்வி) டாக்டா் மதுசூதனன் பொன்னுசாமி உள்ளிட்டோா் ஊழியா்களுக்குப் பயிற்சி அளித்தனா். திறன் மேம்பாட்டு அதிகாரியும் பொறுப்பாளருமான டாக்டா் ரவிக்குமாா் சிட்டோரியா இப் பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.

செங்கழுநீர் அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டிணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் ஆலய பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.புதுச்சேரி மாநிலத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று அரியாங்க... மேலும் பார்க்க

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

புதுச்சேரியில் இதுவரை பிளஸ் 1 படிக்கப் பள்ளியில் சேராத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி வெளி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது. புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

புதுச்சேரியில்அமைச்சா் ஏ.ஜான்குமாா்ப் பதவியேற்று 23 நாள்கள் கடந்தப் பிறகும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பதால் தொகுதி வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். புதுச்சேரி காமராஜா் ... மேலும் பார்க்க

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி கோவிந்தசாலையில் உள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலையில் உள... மேலும் பார்க்க

விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க