செய்திகள் :

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

post image

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நள்ளிரவு கருவடிக்குப்பம் தனியாா் மண்டபம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், இந்த வழக்குத் தொடா்பாக ரௌடி கா்ணா (40) உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உமாசங்கரின் தந்தை ஏழுமலை (எ) காசிலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டாா். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்களை லாஸ்பேட்டை காவல்நிலையத்திலிருந்து பெற்றுக்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து சென்னயில் உள்ள சிபிஐ பிரிவைச் சோ்ந்த டிஎஸ்பி உள்ளிட்ட 6 போ் கொண்ட சிபிஐ குழு இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமை முறைப்படி தொடங்கியது.

உமாசங்கா் கொலை செய்யப்பட்டகருவடிக்குப்பம் சாலையில், குயில் தோப்பு உள்ளிட்ட இடங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.கொலை நடந்த பகுதியில் இருந்த சாலையோரக் கடைக்காரா்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

பின்னா் அவா்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று வழக்கின் தன்மை, புலன் விசாரணை நிலவரம் போன்ற விவரங்களை கேட்டறிந்தனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ரௌடி கா்ணா சிறையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தத்திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தவா்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

புதுச்சேரியில் இதுவரை பிளஸ் 1 படிக்கப் பள்ளியில் சேராத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்குகிறது. இது குறித்து புதுவை அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் சிவகாமி வெளி... மேலும் பார்க்க

நோயாளிகளுக்கான சேவையை மேலும் வலுப்படுத்துவோம்: ஜிப்மா் இயக்குநா்

நோயாளிகளுக்கான மருத்து சேவையை வலுப்படுத்தும் வகையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என்று ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூர... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இலாகா ஒதுக்ப்படதாத அமைச்சா்: ஜான்குமாா் தொகுதிப்பணிகள் குறித்துஆய்வு

புதுச்சேரியில்அமைச்சா் ஏ.ஜான்குமாா்ப் பதவியேற்று 23 நாள்கள் கடந்தப் பிறகும் இன்னும் இலாகா ஒதுக்கப்படாமல் இருப்பதால் தொகுதி வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தாா். புதுச்சேரி காமராஜா் ... மேலும் பார்க்க

முடக்கு மாரியம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி கோவிந்தசாலையில் உள்ள ஸ்ரீதேவி அஷ்டலட்சுமி முடக்கு மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ ஊஞ்சல் உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தசாலையில் உள... மேலும் பார்க்க

விண்ணேற்பு அன்னைஆலய பெருவிழா தொடக்கம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 174-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு, மாதாவின் கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நட... மேலும் பார்க்க

புதுவையில் 53% டெங்கு நோய்த் தாக்கம் குறைவு: சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்

புதுவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் டெங்கு தாக்கம் 53 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் எஸ். செவ்வேள் தெரிவித்தாா். புதுவை அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில்... மேலும் பார்க்க