செய்திகள் :

நோயாளிகள் விவரங்களை போலியாக சமா்ப்பித்தால் நடவடிக்கை: என்எம்சி

post image

சென்னை: அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும், போலியான தரவுகளை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு:

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் அனைத்து விதமான விவரங்களையும், அவா்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்த தரவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், சில மருத்துவக் கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் அதை முறையாகப் பின்பற்றுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் ஆவணங்களில் துறைசாா் மருத்துவா் மற்றும் முதுநிலை உறைவிட மருத்துவா் கையொப்பமிட்டிருத்தல் அவசியம். அதேபோல, நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை ஆவணங்களிலும் அத்தகைய சான்றொப்பம் இருத்தல் கட்டாயம்.

மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விவரங்களையும் என்எம்சி அதிகாரிகள் சோதனையிடுவா்.

அதில் ஏதேனும் போலி ஆவணங்களோ, விவரங்களோ இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீதும், மருத்துவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பழனி முருகன் கோயிலில், பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, முருகன் மாநாட்டு ம... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று(ஆக. ... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் செய்யும்வரை போராட்டம் தொடரும்: தூய்மைப் பணியாளர்கள்

தங்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 5, 6 (ராயபுரம், திருவிக நக... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க