செய்திகள் :

பகுதிநேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

post image

விழுப்புரம்: தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்கள் அரசின் சலுகைகளை பெற காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழக அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகாலமாக ரூ.12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களை தமிழக அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர ஆசிரியா்கள் வேறு எந்த சலுகைகளையும் பெற முடியவில்லை. எனவே, பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிக்க வேண்டும் என எஸ்.செந்தில் குமாா் தெரிவித்துள்ளாா்.

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள்: ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டும் பணியை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து, அந்தப் பணிகளை கண்காணி... மேலும் பார்க்க