செய்திகள் :

பக்ரீத் பண்டிகை நாகூரில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூரில் ரூ 3 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளன.

பக்ரீத் பண்டிகையின் போது ஏழை எளியோா்க்கும் இஸ்லாமியா்கள், குா்பானி வழங்குவது வழக்கம். இதற்கான சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெறும். நிகழாண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாகூருக்கு, புதுக்கோட்டை, அரியலூா், சமயபுரம், அறந்தாங்கி, பேராவூரணி, திருவாரூா், கூத்தாநல்லூா் ஆகிய ஊா்களில் இருந்து விற்பனைக்காக 2,500 செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாகூா் தா்கா குளம் தெரு, பள்ளித் தெரு, தைக்கால் தெரு, மனோவரா வடபுறம் தெரு, தெற்கு தெரு, செய்யது பள்ளி தெரு, பொறையாத்தா கடைத்தெரு, மாலிமாா் தெரு, உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் பண்டிகையையொட்டி ஒரு ஜோடி செம்மறி ஆடுகள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாய... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். 2004-ஆம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க

திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய... மேலும் பார்க்க

திருவாய்மூா் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் சந்திரசேகா் சுவாமி அல்லியங்கோதை அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாய்மூரில் நீல விடங்க தியாகராஜ சுவாமி, பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா... மேலும் பார்க்க