செய்திகள் :

பங்குச் சந்தை: 7-வது நாளாக ஏற்றத்துடன் தொடக்கம்!

post image

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து 7-வது நாளாக செவ்வாய்க்கிழமை காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், சென்செக்ஸ் 311.90 புள்ளிகள் உயர்ந்து 78,296.28 புள்ளிகளாக வர்த்தகமானது. அதேபோல், நிஃப்டியும் 93.15 புள்ளிகள் உயர்ந்து 23,751.50 ஆக வர்த்தகமாகி வருகிறது.

மேலும், காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸும் நிஃப்டியும் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது.

இதையும் படிக்க : தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வருகின்ற ஏப்ரல் 2-ஆம் தேதி புதிய வரிக் கொள்கையை அமல்படுத்தவுள்ளார். இதனிடையே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகள் செய்வதால் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நீடிக்கிறது.

அல்ட்ராடெக் சிமென்ட், எச்.சி.எல். டெக், டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் விற்பனையாகி வருகிறது.

கடந்த 6 நாள்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிவு!

மும்பை: 2024-25 நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது. டிரம்ப் கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற உணர்வு அதிகரித்துள்ளதால், உலகளாவிய... மேலும் பார்க்க

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் 16 புரோ... மேலும் பார்க்க

அதிரடியாக உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 இன்று உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ... மேலும் பார்க்க

விலை உயரும் பிஎம்டபிள்யு காா்கள்

சொகுசுக் காா் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யு குரூப் இந்தியா, தனது வாகனங்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(மார்ச் 27) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,087.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.50 மணியளவில், சென்செக்ஸ் 419.26 ... மேலும் பார்க்க