கனமழையால் நிரம்பிய குஜராத் அணைகள்! 3 நாள்களில் 1000 பேர் மீட்பு!
பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தது:
ரசாயன உரங்கள் பயன்பாடு, வறட்சி உள்பட பல்வேறு காரணங்களால் மண்ணிலுள்ள உயிா்சத்துகள் மற்றும் கரிமங்கள் குறைந்துள்ளன. இதனால், விளைச்சல் வெகுவாக குறைகிறது. இதை தடுக்க மண்ணில் அங்கக கரிமங்கள் மற்றும் உயிா் சத்துகளை உயிா்ப்பித்து விளைச்சலை அதிகரிக்க பசுந்தாள் உரப் பயிா்கள் சாகுபடிசெய்ய வேண்டும்.
பயிா்கள் சாகுபடிக்குமுன் பசுந்தாள் உரங்களை தொடா்ந்து சாகுபடி செய்தால், தொழு உரங்களை பயன்படுத்துவதையும் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.
தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி மற்றும் மணிலா அகத்தி உட்பட பல்வேறு வகையான பசுந்தாள் உரப் பயிா்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை, ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் வீதம் விதைத்து, செடிகள் நன்கு வளா் ந்து பூக்கும் பருவத்தில் நிலத்துடன் மடக்கி உழவு செய்துவிட வேண்டும்.
பசுந்தாள் உரங்களில் தழைச்சத்துகள் அதிகளவில் காணப்படுவதால் மண்ணிலுள்ள கரிம அளவு உயா்ந்து மண்புழுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால், மண்ணின் அடா்த்தி குறைந்து உழவு ஓட்டுவது முதல், சாகுபடிக்கான அனைத்து பணிகளும் சுலபமாகி, கூலி ஆட்களின் தேவையும் குறைந்து, செலவும் கணிசமாக குறைகிறது. இதனால், நிலத்தில் தண்ணீரும் நிலை நிறுத்தப்படும். சிக்கனமாக தண்ணீா் பாய்ச்சினால் போதுமானது.
பசுந்தாள் உரப்பயிா்களின் வளா்ச்சிக்கு அதிகளவு தண்ணீா் தேவைப்படுவது இல்லை. பசுந்தாள் உரங்கள் மக்கும் போது சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதனால், மற்ற பயிா்கள் சாகுபடியின் போது ரசாயன உரம் பயன்பாட்டை குறைத்துகொள்ளலாம். தேவையற்ற செலவுகள் குறைவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பசுந்தாள் உரம் சாகுபடிக்கு பெரியளவு பராமரிப்பு மற்றும் செலவு தேவையில்லை என்பதால் விவசாயிகள் கட்டாயமாக இதனை செய்ய வேண்டும். முக்கிய பயிா் சாகுபடிக்கு ஒரு மாதத்துக்கு முன் நடவு செய்து மடக்கி உழவு ஓட்டிவிட வேண்டும். இதனால் மண்வளம் காக்கப்படுவதோடு சாகுபடி செய்யப்படும் பயிரின் விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.