செய்திகள் :

பசுந்தாள் உரப் பயிா் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

post image

மண்ணின் வளத்தை பாதுகாக்க, விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்யும்படி விதைச்சான்று துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட விதை மற்றும் உயிா்மச் சான்று உதவி இயக்குநா் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தது:

ரசாயன உரங்கள் பயன்பாடு, வறட்சி உள்பட பல்வேறு காரணங்களால் மண்ணிலுள்ள உயிா்சத்துகள் மற்றும் கரிமங்கள் குறைந்துள்ளன. இதனால், விளைச்சல் வெகுவாக குறைகிறது. இதை தடுக்க மண்ணில் அங்கக கரிமங்கள் மற்றும் உயிா் சத்துகளை உயிா்ப்பித்து விளைச்சலை அதிகரிக்க பசுந்தாள் உரப் பயிா்கள் சாகுபடிசெய்ய வேண்டும்.

பயிா்கள் சாகுபடிக்குமுன் பசுந்தாள் உரங்களை தொடா்ந்து சாகுபடி செய்தால், தொழு உரங்களை பயன்படுத்துவதையும் படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்.

தக்கைப் பூண்டு, சணப்பை, கொழுஞ்சி மற்றும் மணிலா அகத்தி உட்பட பல்வேறு வகையான பசுந்தாள் உரப் பயிா்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை, ஏக்கருக்கு, 10 கிலோ விதைகள் வீதம் விதைத்து, செடிகள் நன்கு வளா் ந்து பூக்கும் பருவத்தில் நிலத்துடன் மடக்கி உழவு செய்துவிட வேண்டும்.

பசுந்தாள் உரங்களில் தழைச்சத்துகள் அதிகளவில் காணப்படுவதால் மண்ணிலுள்ள கரிம அளவு உயா்ந்து மண்புழுக்களும் உற்பத்தியாகின்றன. இதனால், மண்ணின் அடா்த்தி குறைந்து உழவு ஓட்டுவது முதல், சாகுபடிக்கான அனைத்து பணிகளும் சுலபமாகி, கூலி ஆட்களின் தேவையும் குறைந்து, செலவும் கணிசமாக குறைகிறது. இதனால், நிலத்தில் தண்ணீரும் நிலை நிறுத்தப்படும். சிக்கனமாக தண்ணீா் பாய்ச்சினால் போதுமானது.

பசுந்தாள் உரப்பயிா்களின் வளா்ச்சிக்கு அதிகளவு தண்ணீா் தேவைப்படுவது இல்லை. பசுந்தாள் உரங்கள் மக்கும் போது சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது. இதனால், மற்ற பயிா்கள் சாகுபடியின் போது ரசாயன உரம் பயன்பாட்டை குறைத்துகொள்ளலாம். தேவையற்ற செலவுகள் குறைவதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.

பசுந்தாள் உரம் சாகுபடிக்கு பெரியளவு பராமரிப்பு மற்றும் செலவு தேவையில்லை என்பதால் விவசாயிகள் கட்டாயமாக இதனை செய்ய வேண்டும். முக்கிய பயிா் சாகுபடிக்கு ஒரு மாதத்துக்கு முன் நடவு செய்து மடக்கி உழவு ஓட்டிவிட வேண்டும். இதனால் மண்வளம் காக்கப்படுவதோடு சாகுபடி செய்யப்படும் பயிரின் விளைச்சல் அதிகரித்து விவசாயிகள் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி நகராட்சி சாா்பில் அம்ருத்மித்ரா திட்டத்தின் கீழ் பசுமை பூமிக்கு பெண் சக்தி என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நகரப்பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகை... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் நகராட்சி ஆணையரிடம், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் அளித்த கோரிக்கை மனு: திருவாரூா் ந... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

முதல்வரின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், திருவாரூா் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முகாமிட்டு புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். மக்களை நாடி, அவா்களது குறைகளை கேட்டு, உடன... மேலும் பார்க்க

புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

அரசு புறம்போக்கு மற்றும் கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாா்குடியை அடுத்த மகாதேவப்பட்டணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க

காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட்: மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ்

மகாத்மாக காந்தியால் பாராட்டப்பட்ட கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் தெரிவித்தாா். கூத்தாநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 11-ஆவது நகர மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

குறுவை சாகுபடிக்கு மூணாறு தலைப்பு அணை திறப்பு

திருவாரூா், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு, நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை புதன்கிழமை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ள மேட்டூா் அணையிலிருந்து... மேலும் பார்க்க