செய்திகள் :

பச்சைப் பட்டினி விரதத்தைத் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்!

post image

திருச்சி: பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதத்தைத் தொடங்கினார் சமயபுரம் மாரியம்மன்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.

சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலிலும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களால் திருமேனி பிரதிஷ்டையில் இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள் பாலிப்பது தனிப்பெரும் சிறப்பாகும்.

கொடிமரம்

அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிப்படுவது சிறப்பு. மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு திருக்கோயிலின் மேற்கூரையில் சிற்பச்சான்றும் உள்ளது. மேஷம் - மீனம் வரையிலான பன்னிரு ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும், மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன.

பூக்கள் எடுத்துச் செல்லும் பக்தர்கள்.

மேலும் தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயணியைத் தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தததால் இத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராண காலந்தொட்டே இருந்து வருகிறது

மிகத் தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. இது இத்திருத்தலத்தின் புராண பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.

இத் திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரமே ஆகும். இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி, பதம் மாறி சிவபதத்தில் மிகப் பெரிய சுதை திருவுருவமாக விக்ரம சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன், தங்கத் திருமுடியுடன், குங்கும நிறமேனியில் நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, வைரக் காதணி, வைர மூக்குத்தி சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருளொளிப் பாலித்து, அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும் மாதுளம் மேனியாய், மஞ்சள் உடை உடுத்தி வாசனை மலர்களை திருமேனி முழுவதும் தரித்து காட்சியளிக்கிறாள்.

இதனிடையே இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளையும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சைப் பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இந்த 28 நாள்களில் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர் மோர், கரும்பு பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: மின்சார ரயில்கள் ரத்து: கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

இதனிடையே அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா தொடங்கியது.

திருக்கோயிலிருந்து அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையர் அ.இரா.பிரகாஷ் , அறங்காவலர்கள் பி.பிச்சை மணி, ராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் திரளான பக்தர்கள் பூதட்டுகளுடன் யானை மீது பூக்கள் வைக்கப்பட்டு, ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாட்டினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க

அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி. சுழல், சுழல் 2 இ... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார்.இதனைத் ... மேலும் பார்க்க