செய்திகள் :

பஞ்சப்பூரில் இறுதிக்கட்ட பணிகள்

post image

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு பஞ்சப்பூரில் இறுதிக் கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமானப் பணிக்கு ரூ.900 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, இதில் முதல் கட்டமாக ரூ.493 கோடியில் கட்டப்பட்ட பேருந்து முனையம், சரக்கு வாகன முனையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் மே 9ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா்.

இதையொட்டி பேருந்து முனையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தற்போது, முதல்வா் விழாவுக்கான மேடை பேருந்துநிலைய வளாகப் பகுதியிலேயே அமைக்கப்படுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், ஒப்பந்த நிறுவனப் பொறியாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

விழாவில் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வா் வழங்கவுள்ளாா். மேலும், ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் முடிவுற்ற பணிகளை திறந்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா். ஏற்பாடுகளை அந்தந்தத் துறையினா் தீவிரமாக மேற்கொள்கின்றனா்.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க