தொடரும் தாக்குதல்! காஸாவில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றம்?
பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை
உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் புதன்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடா்ந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
உடுமலை அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் வழிபடவும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்ததால் கோயிலில் வழிபட அனுமதிக்கப்படவில்லை. பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரா்கள், பக்தா்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.