செய்திகள் :

பஞ்சாப் எல்லையில் 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

post image

போர்ப் பதற்றம் காரணமாக எல்லையை ஒட்டியுள்ள பஞ்சாப் மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றம் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள ஐந்து பஞ்சாப் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மே 8 அன்று மாநில அரசுக் கல்வி நிறுவனங்களை மூன்று நாள்களுக்கு மூட உத்தரவிட்டது.

பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டாலும் எல்லையிலுள்ள ஆறு மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பஞ்சாப் பாகிஸ்தானுடன் 553 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அமிர்தசரஸ், டர்ன் தரன், பதான்கோட், ஃபாசில்கா, ஃபெரோஸ்பூர், குருதாஸ்பூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

குருதாஸ்பூரில் உள்ள பள்ளிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மற்ற ஐந்து எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் புதன்கிழமையான இன்று திறக்கப்பட்டன.

அரசு வழிகாட்டுதல்களின்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதாக அமிர்தசரஸில் உள்ள அட்டாரியில் உள்ள ஸ்ரீ குரு ஹர்க்ரிஷன் பொதுப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

பதான்கோட்டில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர் வருகை 80 சதவீதமாக இருந்ததாகவும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஆசிரியர் கூறினார்.

பஞ்சாபில் எல்லைப் பகுதிகளில் நிலைமை இயல்பானதைத் தொடர்ந்து சந்தைகளில் வழக்கம்போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டன.

நான்கு நாள்கள் எல்லை தாண்டிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் மே 10 அன்று ஒரு உடன்பாட்டை எட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும... மேலும் பார்க்க

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் ... மேலும் பார்க்க

2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் ந... மேலும் பார்க்க

பஞ்சாப் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பய... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக உயர்வு!

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, இந்த 2024 - 25ஆம் நிதியாண்டில் ரூ.23,622 கோடியாக அதிகரித்துள்ளது.இதுவே கடந்த ஆண்டு ரூ.21,083 கோடியாக இருந்ததும், தற்ப... மேலும் பார்க்க

"சிந்தூர்" வெற்றி: பிரதமருக்குப் பாராட்டுத் தெரிவித்த முதல்வர் தாமி!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை வெற்றிகரமாக்கிய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுத் தெரிவித்தார்.டேராடூனில் திரங்கா சம்மன் யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கி... மேலும் பார்க்க