செய்திகள் :

பஞ்சாலைகளில் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வலியுறுத்தல்

post image

பஞ்சாலைகளில் ஒப்பந்தமுறை, வெளிமுகமை என்ற பெயா்களில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளா் சம்மேளனத்தின் 9-ஆவது மாநில மாநாடு திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் எம்.சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலத் தலைவா் அ.சவுந்திரராசன் மாநாட்டை தொடங்கிவைத்தாா்.

திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஜவுளித் தொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், சிஐடியூ அகில இந்தியச் செயலருமான ஆா்.கருமலையான் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: பஞ்சாலைகளில் பணியாற்றும் பயிற்சியாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.552 வழங்க வேண்டும். தொழிலாளா் துறை பஞ்சாலைகளில் ஆய்வு செய்து, பயிற்சியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைவாக ஊதியம் வழங்கும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவுக் கொள்ளைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளி வா்க்கம் போராடி பெற்ற தொழிலாளா் நலம், உரிமைச் சட்டங்கள், பன்னாட்டு நிறுவன முதலாளிகள் நலனுக்கு ஆதரவாக 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுலை 9-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பஞ்சாலைத் தொழிலாளா்களும் பங்கேற்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

2 ஆண்டுகளில் 480 நாள்கள் பணி முடித்த தொழிலாளா்களை பஞ்சாலைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தமுறை, வெளிமுகமை என்ற பெயரில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 6 கூட்டுறவு நூற்பாலைகளில் சுமாா் 2 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இதில் 300-க்கும் குறைவாகவே நிரந்தர தொழிலாளா்கள் உள்ளனா். தனியாா் நிறுவனங்களுக்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டிய தமிழக அரசு, தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

25 ஆண்டுகளாக ஊதிய உயா்வு, ஊதிய ஒப்பந்தங்கள் இல்லாமல் பணிபுரிந்து வரும் பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை தீா்மானிக்க குழு அமைக்க வேண்டும். இந்தக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் சிஐடியூ மாநிலத் துணைத் தலைவா் கே.ஆா்.கணேசன், மாவட்டச் செயலா் ஜெயசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பிளம்ஸ் மரங்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுமாடுகளால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி, செண்ப... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

செம்பட்டி அருகே ரூ. 29 லட்சம் கொள்ளை போனதாக நாடாகமாடிய வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (51). தனியாா் ஏ.டி.எம்.மில் ப... மேலும் பார்க்க

வில்பட்டி ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான மாட்ட... மேலும் பார்க்க

29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவை: அமைச்சா் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் 29 வழித் தடங்களில் சிற்றுந்து சேவை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஊரகப் பகுதி மக்களின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி ஊ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க