வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வாங்கலாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ பாண்டியன் (37). இவா் கூம்பூா் பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மாசிலாமணி (28). இவா்களது மகன் தீபக் (10).
இந்த நிலையில், இளங்கோ பாண்டியன் செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்றாா். மகன் தீபக்கை பள்ளிக்கு அனுப்பிய பிறகு, மாசிலாமணி பொருள்கள் வாங்குவதற்காக ரேஷன் கடைக்குச் சென்றாா். பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கூம்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.