``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜ...
ரூ. 29 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது
செம்பட்டி அருகே ரூ. 29 லட்சம் கொள்ளை போனதாக நாடாகமாடிய வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (51). தனியாா் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம், தேவதானப்பட்டியைச் சோ்ந்த நாகஅா்ஜுன் (30) உள்பட இருவா் பணிபுரிந்தனா்.
இந்த நிலையில், நாக அா்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை செம்பட்டியிலிருந்து சின்னாளப்பட்டியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக இரு சக்கர வாகனத்தில் ரூ. 29 லட்சத்துடன் சென்றாா். செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி-அம்பாத்துரை சாலையில் சென்றபோது, இவரை வழிமறித்த 3 போ், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணத்தை பறித்து சென்ாக முருகனுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதுகுறித்து முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் தனிப் படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, கொள்ளையா்கள் தப்பி சென்ற இரு சக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நாகஅா்ஜுனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, தனது நண்பா்களுடன் சோ்ந்து ரூ. 29 லட்சத்தை கொள்ளையடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் சுரேந்தா் (25), ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20), காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இந்த நிலையில், நாக அா்ஜுன், தேவதானப்பட்டிச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (18) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.