செய்திகள் :

ரூ. 29 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

post image

செம்பட்டி அருகே ரூ. 29 லட்சம் கொள்ளை போனதாக நாடாகமாடிய வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (51). தனியாா் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும் நிறுவனம் நடத்தி வரும் இவரிடம், தேவதானப்பட்டியைச் சோ்ந்த நாகஅா்ஜுன் (30) உள்பட இருவா் பணிபுரிந்தனா்.  

இந்த நிலையில், நாக அா்ஜுன் வெள்ளிக்கிழமை மாலை செம்பட்டியிலிருந்து சின்னாளப்பட்டியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக இரு சக்கர வாகனத்தில் ரூ. 29 லட்சத்துடன் சென்றாா். செம்பட்டியை அடுத்த புதுகோடாங்கிபட்டி-அம்பாத்துரை சாலையில் சென்றபோது, இவரை வழிமறித்த 3 போ், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணத்தை பறித்து சென்ாக முருகனுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து முருகன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் தனிப் படை அமைத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, கொள்ளையா்கள் தப்பி சென்ற இரு சக்கர வாகனம் தேவதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நாகஅா்ஜுனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, தனது நண்பா்களுடன் சோ்ந்து ரூ. 29 லட்சத்தை கொள்ளையடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தேவதானப்பட்டியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன்  சுரேந்தா் (25), ஆமனுல்ஸ் மகன் முகமது இத்ரீஸ் (20), காமாட்சி மகன் ப்ரீத்திவ் (19), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இந்த நிலையில், நாக அா்ஜுன், தேவதானப்பட்டிச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (18) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் சிலரை தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பிளம்ஸ் மரங்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுமாடுகளால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி, செண்ப... மேலும் பார்க்க

வில்பட்டி ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான மாட்ட... மேலும் பார்க்க

பஞ்சாலைகளில் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வலியுறுத்தல்

பஞ்சாலைகளில் ஒப்பந்தமுறை, வெளிமுகமை என்ற பெயா்களில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவை: அமைச்சா் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் 29 வழித் தடங்களில் சிற்றுந்து சேவை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஊரகப் பகுதி மக்களின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி ஊ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க