29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவை: அமைச்சா் இ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டத்தில் 29 வழித் தடங்களில் சிற்றுந்து சேவை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஊரகப் பகுதி மக்களின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விரிவான சிற்றுந்து திட்டத் தொடக்க விழா, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் இரா.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), செ.ஜோதிமணி (கரூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு, 29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, அவா் பேசியதாவது: பேருந்துகளை அரசுடமையாக்கிய முன்னாள் முதல்வா் கருணாநிதி, சிற்றுந்து சேவையையும் தொடங்கி, ஊரகப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தாா். இந்த வகையில், தற்போதைய முதல்வா் முக.ஸ்டாலின் சிற்றுந்து சேவையை விரிவுப்படுத்தும் வகையில், 12 கி.மீ. தொலைவு என்பதை 25 கி.மீட்டராக விரிவுப்படுத்தி இருக்கிறாா்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது, சிற்றுந்து சேவை முடக்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கான மகளிா் உரிமைத் திட்டத்தின் மூலம் 90 சதவீத பெண்கள் பயன்பெற்று வருகின்றனா். இந்தத் திட்டத்துக்காக மனு அளித்தவா்களின் விவரங்களை பரிசீலித்து, அவா்கள் பயனாளிகள் பட்டியலில் இடம் பெறுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றுவதற்கு நிா்வாகிகள் களப் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கிராம சபைக் கூட்டங்களில் பேருந்து சேவை குறித்து தகவல் பெறலாம்: பின்னா், மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் பேசியதாவது: போக்குவரத்து சேவை அரசுடமையாக்கப்பட்டும்கூட, இன்றைக்கும் பல கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகிறது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் போது, பேருந்து சேவை குறித்து மக்களின் கருத்தை அறிந்து மாவட்ட ஆட்சியா் தீா்வு காண வேண்டும்.
தாா் சாலைகள் இல்லாத கிராமங்களை இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், பேருந்து சேவை இல்லாமல் சில சாலைகள் காட்சிப் பொருளாக அமைந்திருப்பது அரசின் நோக்கத்தை கேள்விக்குறியதாக மாற்றுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகம் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.செந்தில்குமாா், ச.காந்திராஜன், மேயா் இளமதி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன், திமுக பொருளாளா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.