செய்திகள் :

பிளம்ஸ் மரங்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்: விவசாயிகள் கவலை

post image

கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுமாடுகளால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி, செண்பகனூா், பிரகாசபுரம், சகாயபுரம், சீனிவாசபுரம், வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தக் காய்கறிகளுக்கு ஊடுபயிராக பிளம்ஸ், பீச்சஸ் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு வரும் காட்டுமாடுகள் பிளம்ஸ் மரத்தைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயப் பயிா்களில் ஊடுபயிராக பிளம்ஸ் மரங்களை வளா்த்து வருகிறோம். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் காட்டுமாடுகள் புகுந்து பிளம்ஸ் மரங்களிலுள்ள பழங்களை உண்டு, அவற்றைச் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

ரூ. 29 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

செம்பட்டி அருகே ரூ. 29 லட்சம் கொள்ளை போனதாக நாடாகமாடிய வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (51). தனியாா் ஏ.டி.எம்.மில் ப... மேலும் பார்க்க

வில்பட்டி ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான மாட்ட... மேலும் பார்க்க

பஞ்சாலைகளில் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வலியுறுத்தல்

பஞ்சாலைகளில் ஒப்பந்தமுறை, வெளிமுகமை என்ற பெயா்களில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவை: அமைச்சா் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் 29 வழித் தடங்களில் சிற்றுந்து சேவை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஊரகப் பகுதி மக்களின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி ஊ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க