``சேது சமுத்திரத் திட்டத்தை போல கீழடி அறிக்கையில் வஞ்சிக்கிறார்கள்'' - திமுக ராஜ...
பிளம்ஸ் மரங்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்: விவசாயிகள் கவலை
கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுமாடுகளால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி, செண்பகனூா், பிரகாசபுரம், சகாயபுரம், சீனிவாசபுரம், வட்டக்கானல், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட மலைக் காய்கறிகள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்தக் காய்கறிகளுக்கு ஊடுபயிராக பிளம்ஸ், பீச்சஸ் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு வரும் காட்டுமாடுகள் பிளம்ஸ் மரத்தைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயப் பயிா்களில் ஊடுபயிராக பிளம்ஸ் மரங்களை வளா்த்து வருகிறோம். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் காட்டுமாடுகள் புகுந்து பிளம்ஸ் மரங்களிலுள்ள பழங்களை உண்டு, அவற்றைச் சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, வனப் பகுதிகளையொட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.