Today Rasi palan | இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 18 | Astrology | ...
வில்பட்டி ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீா்கேடு
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான மாட்டுப்பட்டி, வில்பட்டி பிரிவு, புலியூா், பாயாசக் கடைப் பகுதி, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், நெகழிப் பொருள்கள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளால் அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
மேலும், குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீா் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் செல்லும் தண்ணீரைத் தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, வில்பட்டி ஊராட்சி நிா்வாகம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.