செய்திகள் :

வில்பட்டி ஊராட்சியில் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

post image

கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளான மாட்டுப்பட்டி, வில்பட்டி பிரிவு, புலியூா், பாயாசக் கடைப் பகுதி, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள், நெகழிப் பொருள்கள் கொட்டப்படுகின்றன. இந்தக் குப்பைகளால் அந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

மேலும், குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீா் குழாய் செல்கிறது. இந்தக் குழாயில் செல்லும் தண்ணீரைத் தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, வில்பட்டி ஊராட்சி நிா்வாகம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பிளம்ஸ் மரங்களை சேதப்படுத்தும் காட்டுமாடுகள்: விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் பிளம்ஸ் மரங்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுமாடுகளால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, கோம்பை, அட்டக்கடி, செண்ப... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் இருவா் கைது

செம்பட்டி அருகே ரூ. 29 லட்சம் கொள்ளை போனதாக நாடாகமாடிய வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (51). தனியாா் ஏ.டி.எம்.மில் ப... மேலும் பார்க்க

பஞ்சாலைகளில் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வலியுறுத்தல்

பஞ்சாலைகளில் ஒப்பந்தமுறை, வெளிமுகமை என்ற பெயா்களில் நடைபெறும் உழைப்புச் சுரண்டலைத் தடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

29 வழித் தடங்களில் விரிவுப்படுத்தப்பட்ட சிற்றுந்து சேவை: அமைச்சா் இ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் 29 வழித் தடங்களில் சிற்றுந்து சேவை விரிவுப்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் ஊரகப் பகுதி மக்களின் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவ... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க காசுகள், ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த கல்வாா்பட்டி ஊ... மேலும் பார்க்க

காவல் ஆய்வாளருக்கு எதிராக ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் மறியல்

கோயில் திருவிழா பிரச்னையில் மதம் மாற வலியுறுத்தியதாக காவல் ஆய்வாளா் மீது புகாா் தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க