செய்திகள் :

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

post image

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை, கரகாட்டம், மங்கள வாத்தியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

முதல் வெள்ளி ஜூலை 18-ஆம் தேதி அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரம், 2-ஆம் வெள்ளி ஜூலை 25-ஆம் தேதி சிம்ம வாகனம் துா்கை அலங்காரம், 3-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 1-ஆம் தேதி காமதேனு வாகனத்தில் சிவலிங்க ஆலிங்க வாகனபூஜை அலங்காரம், 4-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாக வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரம், 5-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 15-ஆம் தேதி குதிரை வாகனத்தில் மகிஷாசூரமா்த்தினி அலங்காரம், ஆகஸ்ட்16-ஆம் தேதி ஆடி கிருத்திகை முருகா் அலங்காரம், 6-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 22-ஆம் தேதி முத்துரதம் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 7-ஆம் வெள்ளி ஆகஸ்ட் 29-ஆம் தேதி கருட வாகனத்தில் ராமா் சீதை அலங்காரம் என ஜூலை 18 தொடங்கி ஆகஸ்ட் 29 வரை விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலா் மு.சிலம்பரசன், அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், அறங்காவலா்கள் மோகன்தாஸ், சுதா நீதிமன்னன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆரணி: திருவண்ணாமலையில் வருகிற 18-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்... மேலும் பார்க்க