செய்திகள் :

படுக்கை இல்லாததால் கொரோனா நோயாளியை கொலைசெய்ய சொன்ன அரசு டாக்டர்; கசிந்த ஆடியோவால் சிக்கினார்!

post image

2020-21ம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கத்தால் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர். அதிகமான மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்துக்கொள்ள போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம், லாத்தூர் மாவட்டத்தில் கொரோனா நேரத்தில் அரசு டாக்டர் நோயாளியை கொலை செய்ய சொன்ன செய்தி 4 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிய வந்துள்ளது. லாத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சசிகாந்த் டாங்கேயிடம், மாவட்ட அரசு டாக்டர் சசிகாந்த் தேஷ்முக் கொரோனா நோயாளியை கொலை செய்துவிடுங்கள் என்று சொல்லும் ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சித்திரிப்புப் படம்

டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மாவட்ட கூடுதல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவர் லாத்தூர் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சசிகாந்த் டாங்கேயிடம் போனில் பேசிய போது, எந்த நோயாளியையும் உள்ளே விடாதீர்கள். தயானி போன்ற நோயாளியை கொன்றுவிடுங்கள் என்று பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய டாக்டர் டாங்கே, ஏற்கனவே ஆக்ஜிசன் சப்ளை அளவு குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்ட ஆடியோ பதிவு இப்போது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி இருக்கிறது.

டாக்டர் தேஷ்பாண்டே கொலை செய்ய சொன்ன நோயாளி கெளஸர் பாத்திமா தயானி குணமடைந்துவிட்டார். ஆனாலும் டாக்டர்களின் உரையாடல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த ஆடியோவின் அடிப்படையில் கெளஸர் பாத்திமாவின் கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திலிப் கூறுகையில்,''டாக்டர் தேஷ்பாண்டேயின் மொபைல் போன் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. டாக்டர் டாங்கேயிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆடியோவின் நம்பகத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

டாக்டர் டாங்கே வெளியில் இருப்பதால் வந்தவுடன் அவரது மொபைல் போனும் வாங்கி ஆய்வு செய்யப்படும்'' என்று தெரிவித்தார். பாத்திமாவின் கணவர் கொடுத்துள்ள புகாரில், ``எனது மனைவி பாத்திமா உத்கிர் அரசு மருத்துவமனையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். 10 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். 7வது நாள் சிகிச்சையின் போது டாக்டர் டாங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அருகில் நான் நின்று கொண்டிருந்தேன். அந்நேரம் டாக்டர் டாங்கேயிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஸ்பீக்கரில் போட்டு டாக்டர் டாங்கே பேசினார்.

கொரோனா

எதிர்முனையில் பேசிய டாக்டர் தேஷ்பாண்டே, மருத்துவமனையில் படுக்கைகள் இருப்பு குறித்து விசாரித்தார். அதற்கு பதிலளித்த டாக்டர் டாங்கே படுக்கைகள் காலி இல்லை என்று தெரிவித்தார். உடனே டாக்டர் தேஷ்பாண்டெ தயானி போன்ற நோயாளிகளை கொன்றுவிடுங்கள் என்று தெரிவித்தார். எனது மதம், சாதியை குறிப்பிட்டு தேஷ்பாண்டே பேசினார். எனது மனைவி அப்போது சிகிச்சையில் இருந்ததால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. சில நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து எனது மனைவி வீடு திரும்பினார். ஆனால் டாக்டர்கள் பேசிக்கொண்ட உரையாடல் சமூக வலைத்தள பக்கத்தில் பரவி இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா நேரத்தில் இறந்தவர்கள் குறித்து எந்த வித கேள்வியும் எழுப்பப்படவில்லை. இதனால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி டாக்டர் தேஷ்பாண்டே இது போன்று பேசி இருக்கிறார்.

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக... மேலும் பார்க்க

Reborn doll: குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள்; சர்ச்சையைக் கிளப்பக் காரணம் என்ன?

வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் இந்த ரீபான் (Reborn) பொம்மைகள், தத்ரூபமாக உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் கூட இது தொடர்பான வீடியோக்... மேலும் பார்க்க

Instagram Reels: மணப்பெண்ணுக்கு மீன் வடிவில் தலை அலங்காரம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள்.அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங... மேலும் பார்க்க

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "நாங்கள்தான் காட்டின் மன்னர்கள்" - பழங்குடிகளின் வாழ்க்கையைப் பாப் பாடலாக்கும் பெண்

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே, கட்சிரோலி, கோண்டியா போன்ற மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர்.பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், அவர்களின்... மேலும் பார்க்க

மும்பை அடுக்குமாடி கட்டடத்தில் 4 மாடிகள்; பிரமாண்டம், சொகுசு! - ரூ.639 கோடிக்கு வாங்கிய லீனா திவாரி

மும்பையில் சொத்துகளின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் தென்மும்பை, மேற்கு புறநகரில் உள்ள பாந்த்ரா, அந்தேரி போன்ற பகுதியில் கடற்கரையையொட்டி கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பிளாட்களின் விலை நினை... மேலும் பார்க்க