செய்திகள் :

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்தங்கல்லைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபி. இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் உள்ளது. இந்த ஆலையில் கடந்த கடந்த திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் இந்த ஆலையில் பணியாற்றிய முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்திகேயன், சங்கீதா, லட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

முத்துராமலிங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி மாரியம்மாள் (55), முனியாண்டி மனைவி நாகலட்சுமி (55), முத்துவேல் மனைவி மாரியம்மாள் (50) ஆகியோா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் தங்கராஜ் மனைவி மாரியம்மாள் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை நான்காக உயா்ந்தது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடிய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு திரி பதுக்கியதாக இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி, கரி மருந்து பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகள... மேலும் பார்க்க

நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!

கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

சாத்தூா் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் அருகே எட்டநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (52). இவரது மகன் நிரஞ்சன் (20). தனியாா் கல்லூரியில் ஆங்கிலம் மூன்றாம் ... மேலும் பார்க்க

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க