பட்டாவில் பெயா் மாற்றம், நீக்கம் செய்ய வாய்ப்பு
நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளம் மூலம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முழுவதும், கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் நிலங்களின் ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதை பயன்படுத்தி பட்டாவில் உள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களின் வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்கலாம். இதற்கு பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தி முகாமில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.