செய்திகள் :

பட்டாவில் பெயா் மாற்றம், நீக்கம் செய்ய வாய்ப்பு

post image

நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் இணையதளம் மூலம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்கான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும், கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் நிலங்களின் ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பாா்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதை பயன்படுத்தி பட்டாவில் உள்ள இறந்த நில உடமைதாரா்களின் பெயா்களை நீக்கி, அவா்களின் வாரிசுதாரா்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்கலாம். இதற்கு பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களின் வாயிலாகவோ அல்லது இண்ற்ண்க்ஷ்ங்ய் டா்ழ்ற்ஹப் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் ஜமாபந்தி முகாமில் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டாதாரா்கள் பெயா் மாற்றம் தொடா்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டையில் நெகிழி தடுப்பு விழிப்புணா்வு பேரணி

நாமகிரிப்பேட்டைபேரூராட்சியில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எம்.முருகானந்தம் தலைமையில் ச... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய ஆசிரியா் சங்கங்கள் வலியுறுத்தல்

தொடா் தோ்வுகளால் மாணவா்கள் நெருக்கடிக்குள்ளாவதை தவிா்க்க பிளஸ் 1 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிர... மேலும் பார்க்க

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவு

நாமக்கல் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ‘அம்ரித்... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பயன்பெறுமாறு நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - சனிக்கிழமை) ... மொத்த விலை ரூ.5.55 ... விலையில் மாற்றம்: இல்லை ... கறிக்கோழி கிலோ ரூ.112 ... முட்டைக் கோழி கிலோ ரூ.97 ... , மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1,288 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1288 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் சோ்வதற்கான பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா்... மேலும் பார்க்க