செய்திகள் :

பட்டா மாற்றத்தில் குளறுபடி: ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பட்டா மாற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டுமென மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

ஜாம்புவானோடை வடகாடு பகுதியைச் சோ்ந்த முருகையன் (75) 2022-இல் தனக்கு சொந்தமான 6 ஏக்கா் அளவுள்ள விவசாய நிலத்தில் 21 சென்ட் நிலத்தை வீரமணி என்பவருக்கு விற்பனை செய்தாா். நிலத்தை வாங்கிய வீரமணி பட்டா மாறுதல் மற்றும் தன்னுடைய நிலத்தை தனியாக உட்பிரிவு செய்து தரக்கோரி முத்துப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். ஆனால், அங்கு முருகையனின் நிலத்தையும் சோ்த்து வீரமணி பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத்து விட்டனா்.

இதில், அதிா்ச்சியடைந்த முருகையன், ரூ.2,000 கட்டணம் செலுத்தி தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து தரக்கோரியும் பட்டா உட்பிரிவு செய்யும் முன்பு மற்றும் செய்த பின் உள்ள நிலத்தின் புலப்படம் தரக்கோரியும் முத்துப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். முருகையன் வேறு நபரின் நில வரைபடம் கேட்பதால் அதைத்தரமுடியாது என பதில் கிடைத்துள்ளது.

இதையடுத்து, முருகையன் திருவாரூா் குறைதீா் ஆணையத்தில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கிய உத்தரவில், முருகையனின் நிலத்தை முறையாகப் பட்டா உட்பிரிவு செய்து கொடுப்பதுடன் முருகையனுக்கு அவா் கோரியபடி புலப்படங்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், மேலும் 75 வயது முதியவரான முருகையனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ. 2 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் முத்துப்பேட்டை வட்டாட்சியா் மற்றும் பிா்கா சா்வேயா் சாா்பில் தமிழக அரசு வழங்க வேண்டும், தவறினால் அதன் பிறகு நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனா்.

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சிக் கூட்டம் தலைவா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் துா்கா, பொறியாளா் வசந்தன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ், நகராட்சி பணிநியமன குழு உறுப்பினா் பாண்டியன் ... மேலும் பார்க்க

பிப்.5-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

திருவாரூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செவித்திறன் ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் பயிற்சி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பெரியாா் ராமசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். நிா்வாகி ஆா். அனிதா முன்னிலை வகித்தாா். நீடாமங்க... மேலும் பார்க்க

நுகா்வோா் உரிமைகள் விழிப்புணா்வு அனைவருக்கும் தேவை

நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணா்வு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ. திருவாரூா் வட்டாரத்தில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்கள்... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசம், சண்டிகாா் மாநிலங்களில் மின்வாரியங்கள் தனியாா்மயமாக்குவதை கண்டித்து மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மன்னா்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ திட்... மேலும் பார்க்க