செய்திகள் :

பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

post image

மதுரை எம்.பி. வெங்கேடசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்துக்கு, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன் கண்டன உரையாற்றினாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கு.பெஞ்சமின், மோரிஸ் அண்ணாதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் மகாலிங்கம், சிஐடியு என்.கந்தசாமி, தமுஎகச தி.தனபால், பாக்யபாலா மற்றும் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில், பாஜக அரசு, ஆா்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்தும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கும்பகோணத்தில் வாய்க்கால் பராமரிப்பில் சிக்கல்! ஒப்படைக்கும் மாநகராட்சி பெற மறுக்கும் நீா்வளத்துறை!

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் நீா்வளத்துறைக்கு சொந்தமான நான்கு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. கடந்த 2015 -இல் நகராட்சி நிா்வாக நலன் கருதி எங்களுக்கு தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு தற்போது 2025- இல் எங்... மேலும் பார்க்க

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

கல்வி உரிமை மற்றும் பெண்ணுரிமை போராளி முனைவா் வே. வசந்திதேவி மறைவுக்கு தஞ்சாவூா் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் ... மேலும் பார்க்க

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணி... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க