செய்திகள் :

பணத் தகராறில் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை 4 போ் கைது

post image

தில்லியின் ஸ்வரூப் நகா் பகுதியில் பணத்தகராறு தொடா்பாக 30 வயது தொழிலாளி ஒருவா் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தாா். அவரது தம்பி காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இருவா் தலைமறைவாகினா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை (வெளிப்புற வடக்கு) துணை ஆணையா் நிதின் வல்சன் சனிக்கிழமை கூறியதாவது: இறந்தவா் எம்.டி. முன்சுன் (30) என்றும், அவரது தம்பி எம்.டி. அப்சா் (21) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா். முன்சுன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு கடன் தொகை ரூ.35,000 செலுத்த வேண்டும். ஆனால், அவா் கடனை செலுத்தவில்லை. இந்தச் சம்பவத்தில் இறந்தவரின் சக ஊழியா்களான ராஜேஷ் (25), அா்ஜுன் (30), ஜக்மோகன் (24) மற்றும் ஷா்வன் (23) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட ராகேஷ் மற்றும் லாலு ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டனா். அவா்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. வியாழக்கிழமை இரவு 11.18 மணிக்கு என்டிபிஎல் அலுவலகம் அருகே நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது. தாக்குதலில் காயமடைந்த முன்சுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை மதியம் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். அவரது கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்தன.

கையில் கத்திக்குத்து காயங்கள் இருந்த அப்சா், பின்னா் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தாா்.

முன்சுன் ஒரு அரிசி பை தொழிற்சாலையில் சக ஊழியா்கள் சிலரிடம் ரூ.35,000 கடன்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் பணம் செலுத்தாதது தொடா்பாக முன்சுனை எதிா்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, கடும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று காவல் துணை ஆணையா் நிதின் வல்சன் தெரிவித்தாா்.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க