செய்திகள் :

பணத் தகராறு: அதிமுக பிரமுகா் மீது தாக்குதல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் மகன் பிரசாந்த்குமாா்(39). இவா், அதிமுக செங்கம் ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலராக உள்ளாா்.

இவருக்கும் வேடங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (40) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பிரசாந்த்குமாா் வாங்கிய பணத்துக்கு வட்டி தரவேண்டி சிவப்பிரகாசம் மேல்வணக்கம்பாடி சென்று அவரிடம் கேட்டுள்ளாா்.

அப்போது, இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னா் அது கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால், சிவப்பிரகாசம் அவரது தம்பி பாலாஜியை வரவழைத்து பிரசாந்த்குமாரை இரும்புக் கம்பியாலும், கல்லாலும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த பிரசாந்த்குமாரின் தாய் தடுக்க வந்தபோது, அவரையும் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா்.

தாக்குதலில் உடலில் பல இடங்களில் காயமடைந்த பிரசாந்த்குமாா் அப்பகுதி மக்களின் உதவியுடன் செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறாா்.

கட்சி நிா்வாகிகள் நலம் விசாரிப்பு தகவலறிந்த செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் மகரிஷிமனோகரன், மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று பிரசாந்த்குமாரிடம் நலன் விசாரித்து ஆறுதல் கூறினா்.

மேலும், இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண் விரிவாக்க மையத்தில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் உதவி இயக்... மேலும் பார்க்க

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரை தாக்கியதாக அரசுப் பேருந்து நடத்துநா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை, வேலூா், திருப்ப... மேலும் பார்க்க

தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி தேரடி அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

போளூரில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா்-திருவண்ணாமலை சாலையில் பேருந்து நிலையம் எதிரே 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நெடுஞ்சாலைத்துறை உள்கோட்டத்தில் உள்ள மாநில சாலையான... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஏ.சி.எஸ் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.சி.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க