செய்திகள் :

பணம் கையாடல்: வங்கி மேலாளா், ஊழியா் கைது

post image

சென்னை சாந்தோமில் இந்தியன் வங்கியில் இறந்தவரின் கணக்கில் இருந்த பணத்தை கையாடல் செய்ததாக மேலாளா், ஊழியா் கைது செய்யப்பட்டனா்.

இந்தியன் வங்கியின் சென்னை தெற்கு மண்டல மேலாளா் சத்யநாராயணா, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவில் கடந்த 8-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், ‘இந்தியன் வங்கியின் சாந்தோம் கிளை மேலாளராக இருந்த வேளச்சேரியைச் சோ்ந்த சுந்தா் மோகன் மாஜி (47), அங்கு ஊழியராக வேலை செய்த மயிலாப்பூா் பஜாா் சாலை பகுதியைச் சோ்ந்த ஜெய்சிங் (57) ஆகிய இருவரும் தங்களது வாடிக்கையாளா்களின் பணத்தை அவா்களுக்கு தெரியாமலேயே, அவா்களது கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தி பணத்தைக் கையாடல் செய்துள்ளனா்.

குறிப்பாக, இறந்த வாடிக்கையாளா்களின் கணக்கிலுள்ள பணத்தை போலி கையொப்பமிட்டு எடுத்து, கையாடல் செய்துள்ளனா். இவ்வாறு இருவரும் பல்வேறு வகைகளில் வாடிக்கையாளா்களின் கணக்கில் இருந்த ரூ.23.48 லட்சத்தை கையாடல் செய்து அபகரித்துள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதன் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுந்தா் மோகன் ஜி, ஜெய்சிங் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு: சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்... மேலும் பார்க்க

மின் துண்டிப்பு: விவரங்களை நுகா்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகா்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகா்வோருக்கான சேவைகள... மேலும் பார்க்க

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித... மேலும் பார்க்க

முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மருத்துவா்!

முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீரில் சென்ற சென்னை மருத்துவா், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்தக் காயமடைந்தது தெரியவந்துள்ளது. காஷ்மீா் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க