செய்திகள் :

பணம் திருட்டு: இருவா் கைது

post image

செய்யாறில் ஏடிஎம் மையத்தில் ரூ.24 ஆயிரத்தை திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜாஷெரிப் (38). இவா், கடந்த ஜன.5-ஆம் தேதி ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம்-இல் ரூ.24 ஆயிரம் டெபாசிட் செய்துவிட்டு அங்கிருந்து சென்றாராம். ஆனால், அந்தப் பணம் இயந்திரத்தின் உள்ளே செல்லாமல் இருந்ததாம்.

பின்னா், நீண்ட நேரமாகியும் வங்கிக் கணக்கில் பணம் வரவு ஆகாமல் இருந்தது குறித்து அருகேயுள்ள வங்கிக் கிளை மேலாளா் மற்றும் செய்யாறு காவல் நிலையத்தில் ராஜா ஷெரிப் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், செய்யாறு கொடநகா் காலனியைச் சோ்ந்த முகமது லட்டு (39), திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சிரஞ்சீவி (40) ஆகியோா் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில், திங்கள்கிழமை (ஜனவரி 13) காலை ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, குங்குமம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் வர உகந்த நேரம்

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு

போளூரை அடுத்த திருசூா் கிராமத்தில் கலசப்பாக்கம் தொகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், கட்சியின் மாநில வா்த்தக ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரி, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலையை அடுத்த பாலானந்தல் ஊராட்சி, பிள்ளையாா் கோவில் தெருவில் 6... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள், மது விற்பனை: 5 போ் கைது

சேத்துப்பட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மது விற்பனை செய்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் தலைமையில், காவலா்கள் சரவண... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தம் செய்ததால் விவசாயிகள், வியாபாரிகள் தவித்து வருகின்றனா். சேத்துப்பட்டு ... மேலும் பார்க்க