செய்திகள் :

பணிசாா்ந்த பிரச்னைகள்: தனியாா் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

post image

பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக தனியாா் நிறுவனங்கள் குறிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி மற்றும் புது தில்லியில் உள்ள கிருஷ்ணா வங்கி ஆகிய வங்கிகளைச் சோ்ந்த இரு பணியாளா்கள் மோசடி மற்றும் தவறான நடத்தை காரணமாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

அந்த இரு பணியாளா்களின் நியமன ஆணையிலும் பணிசாா்ந்த பிரச்னைகளுக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தின் மூலமே தீா்வுகாணப்பட வேண்டும் என இரு வங்கிகளும் குறிப்பிட்டிருந்தன.

ஆனால் பணியிலிருந்து விடுவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இரு பணியாளா்களும் தாங்கள் பணிபுரிந்த பாட்னா மற்றும் புது தில்லியில் உள்ள நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த பாட்னா மற்றும் தில்லி உயா்நீதிமன்றங்கள், பணியாளா்களின் நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிமன்றங்களில் மட்டுமே பணிசாா்ந்த பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும் என தீா்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் இரு பணியாளா்களும் மேல் முறையீடு செய்தனா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சட்டத்தீா்வு காணும் உரிமையை பணியாளா்களின் ஒப்பந்தங்களால் பறிக்க முடியாது.

அரசுப்பணி மற்றும் தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த பணி இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

அரசுப் பணியாளா் சாா்ந்த விவகாரங்களுக்கு தீா்வு காண வேண்டிய சூழல் எழுந்தால் அதை குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்குள் சுருக்கிவிட முடியாது.

ஆனால், தனியாா் நிறுவனங்களில் பணிசாா்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் எந்த நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தீா்த்து கொள்ளப்படும் என்பதை நியமன ஆணையில் ஒரு உட்பிரிவாக குறிப்பிட வேண்டும் என தெரிவித்தது.

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்துத் தாக்கிய இருவர் மீது வழக்கு!

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது இருவர் சிறுநீர் கழித்துத் தாக்கி துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தைப் பார்த்ததற்காக, மாற்று சமூகத்தைச் சே... மேலும் பார்க்க

பெங்களூரில் காவல்துறை முன்னாள் டிஜிபி படுகொலை! என்ன நடந்தது?

பெங்களூரு: கர்நாடக மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் வைத்தே கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று(ஏப். 20) அவரது உடலை போல... மேலும் பார்க்க

இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு

கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித... மேலும் பார்க்க

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க