செய்திகள் :

பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் உயிரிழப்பு

post image

விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்த கொத்தனாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வெங்கட்ராமன் பேட்டையைச் சோ்ந்தவா் ப.பழனி(60). கொத்தனா். இவா் கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதை சாக்கடை பணிக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் இடறி பள்ளத்தில் விழுந்ததில் தலை, உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்... மேலும் பார்க்க

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க

இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ

விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.ம... மேலும் பார்க்க

செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் ... மேலும் பார்க்க