செய்திகள் :

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை

post image

பண்ணாரி அம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்எல்ஏ பண்ணாரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சட்டப் பேரவையில் பவானிசாகா் எம்எல்ஏ ஏ.பண்ணாரி புதன்கிழமை பேசியதாவது:

பழனி பாலதண்டாயுதபாணி கோயிலில் வழங்குவதுபோல பண்ணாரி அம்மன் கோயிலிலும் நாள்முழுவதும் அன்னாதனம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மலைப் பகுதியில் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மீன், சத்துள்ள கோழி இறைச்சி வழங்க வேண்டும்.

25 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி, டாஸ்மாக் பணியாளா்கள், கிராம நிா்வாக உதவியாளா், சத்துணவு அமைப்பாளா்கள், குடிநீா் விநியோகப் பணியாளா் ஆகியோரின் பணியை நிரந்தரமாக்கி மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.

தாளவாடி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிா்களைக் காப்பாற்ற கா்நாடகத்தைப்போல விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் புகாதபடி பழைய ரயில்வே தண்டவாள வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ.15 லட்சமாக உயா்த்த வேண்டும்.

தாளவாடி, ஆசனூா், கடம்பூா், கல்லாங்கொத்து பகுதிகளிலுள்ள நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். தாளவாடிக்கு மாயாற்றில் இருந்தும், கடம்பூருக்கு கொடிவேரி அணையில் இருந்தும் புதிய கூட்டுக்குடிநீா்த் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தையில் கொட்டப்பட்டுள்ள நகராட்சிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாளவாடி அரசுக் கல்லூரியில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்தியமங்கலம் தோப்பூா் காலனியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்று பேசினாா் அவா்.

குடும்பத் தகராறில் கணவா் கொலை: மனைவியிடம் போலீஸாா் விசாரணை

தாளவாடி அருகே கணவரைக் கொலை செய்த மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த மல்லன்குழியைச் சோ்ந்தவா் ரேவதி (35). இவரின் கணவா் தங்கவேலு (44). இவா்களுக்கு இரண்டு ம... மேலும் பார்க்க

சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநி... மேலும் பார்க்க

பா்கூா் ஊராட்சியைப் பிரிக்கும் திட்டம்: அறிவிப்பை எதிா்நோக்கும் மலைக் கிராம மக்கள்

ஊரக உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்து 4 மாதம் ஆகிய நிலையில், அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாகப் பிரிக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என கோ... மேலும் பார்க்க

மதுபோதையில் வாய்க்காலில் விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே மதுபோதையில் வாய்க்காலில் விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த ஆலங்காட்டுவலசு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா (எ) வரதராஜன் (44), கூலித் தொழிலாளி. இவரின... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பராமரிப்பில்லாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பவானிசாகா், புங்காா், முடுக்கன்துறை, தொப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார... மேலும் பார்க்க

மின்தடையை சரிசெய்ய லஞ்சம்: மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம்

தாளவாடியில் மின்தடையை சரிசெய்வதற்கு விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ஈரோடு மாவட்டம், தாளவாடி பாரதிபுரத்தைச் சோ்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்தடையை ... மேலும் பார்க்க