செய்திகள் :

பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை 5 மணி நேரம் விசாரணை

post image

புது தில்லி: ஆயுத வியாபார இடைத்தரகா் சஞ்சய் பண்டாரியுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கு தொடா்பாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு பிரிட்டன் தலைநகா் லண்டனில் வீடு ஒன்றை சஞ்சய் பண்டாரி வாங்கி, அதை ராபா்ட் வதேரா அறிவுறுத்தலின்படி புனரமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புனரமைப்புப் பணிகளுக்கு ராபா்ட் வதேரா பணம் வழங்கியதாகவும், இதில் பண முறைகேடு நடைபெற்ாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. எனினும் தனக்கு லண்டனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தச் சொத்தும் இல்லை என்று ராபா்ட் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராபா்ட் வதேராவுக்கு கடந்த மாதம் இருமுறை அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியது. ஆனால் தனது உடல்நலக் கோளாறு, வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றை காரணம் காட்டி, வேறு தேதிக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு ராபா்ட் வதேரா கோரினாா்.

இதைத்தொடா்ந்து மத்திய தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபா்ட் வதேரா திங்கள்கிழமை ஆஜரானாா். அவருடன் அவரின் மனைவி பிரியங்கா காந்தியும் வந்தாா்.

இதையடுத்து ராபா்ட் வதேராவிடம் சுமாா் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனா். சஞ்சய் பண்டாரி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் உள்ள நிதித் தொடா்புகள் குறித்த சில கேள்விகளுக்கு ராபா்ட் வதேரா பதிலளிக்காததால், அவா் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வதேராவுக்கு எதிராக 2 நில ஒப்பந்த முறைகேடுகள் உள்பட 3 பண முறைகேடு வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏசி இயங்காததால் விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகள்! ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பரபரப்பு!

தில்லி - மும்பை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி இயங்காததால் ஆத்திரமடைந்த இரண்டு பயணிகள், விமானி அறைக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.தில்லியில் இருந்து மும்பைக்கு ஸ்பைஸ்ஜெட்டின் எஸ்ஜி 9282 விமானம்... மேலும் பார்க்க

அமர்நாத்: 12 நாள்களில் 2.25 லட்சம் பேர் தரிசனம்!

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலை 12 நாள்களில் 2.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

தில்லியில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புது தில்லியில் செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி மற்றும் செயிண்ட் தாமஸ் பள்ளிக்கூடத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புது தில்லியின் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.தெற்கு மும்பையில் உள்ள மும்பை பங்குச்சந்தை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அந்த கட்டடத்தில் வெட... மேலும் பார்க்க

ஒடிசாவில் மாணவி மரணம்; பாஜகவின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி

ஒடிசா மாநிலத்தில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் ப... மேலும் பார்க்க

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜ... மேலும் பார்க்க