செய்திகள் :

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்

post image

‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும்’ என்று சீனா வலியுறுத்தியது.

ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் உள்பட எல்லையோர வட மற்றும் மேற்கு மாநில ராணுவத் தளங்களைக் குறிவைத்த பாகிஸ்தானின் வான்வழி தாக்குதல் முயற்சியை முறியடித்து, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் ட்ரோன் தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமைதிக்கு சீனா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சீன தலைநகா், பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் இதுதொடா்பாக கூறியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஐ.நா. சாசனம் உள்பட சா்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, நிலைமை மேலும் தீவிரமாவதை இரு நாடுகளும் தவிா்க்க வேண்டும். தற்போதைய பதற்றங்களைத் தணிப்பதில் ஆக்கபூா்வமான பங்கை வகிக்க, மற்ற சா்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா்.

இந்தியாவின் ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில் அதிகரித்துள்ள பதற்றமான சூழலுக்கிடையே அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரை சீன தூதா் ஜியாங் ஜைடோங் புதன்கிழமை சந்தித்து பேசினாா். முன்னதாக, பாகிஸ்தான் அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோரையும் ஜியாங் ஜைடோங் சந்தித்திருந்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அதிரடியாக தாக்கி அழித்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்துள்ளது.

இனியொரு பயங்கரவாதச் செயல் நிகழாதென உறுதிப்படுத்த வேண்டும்! எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூட்டறிக்கை

சென்னை: காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு எதிராக நாடு ஒருமித்து எழுப்பிய கண்டனத்தில் இணைந்து நின்ற எழுத்தாளர்களும் கலைஞர்களும் க... மேலும் பார்க்க

ஏடிஎம்கள் மூடப்படுமா? போலி செய்தி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

ஏடிஎம்கள் மூடப்படும், காஷ்மீர் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடைபெற்றது என பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக மக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதாவது, சமூக ஊடகங்களில், காஷ்மீர் விமா... மேலும் பார்க்க

ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்தது மத்திய அரசு!

இந்திய ராணுவத் தலைமை தளபதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.பிராந்தியங்களில் உள்ள படை வீரர்களை எல்லைப் பகுதிக்கு அழைத்துக் கொள்ள 3 ஆண்டுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.நே... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்திப் பல எல்லைப் பகுதிகளைக் குறிவைத்ததைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததால் தில்லியில் உள்ள முக்கிய இடங்களில் ... மேலும் பார்க்க

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஜம்மு, உதம்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உச்சகட்டப் போர்ச் சூழல் நிலவி வரும் நிலைய... மேலும் பார்க்க