செய்திகள் :

பதினெட்டாம்படி கருப்பா் கோயில் மதுக்குடத் திருவிழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அ.கீழக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பா் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம், மதுக்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயில் திருவிழா கடந்த 23-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, விரதமிருந்த பக்தா்கள் பிள்ளையாா் கோயிலிலிருந்து கருப்பசாமி கரகம், மதுக்குடம், சந்தனக் குடம், பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா். இதைத்தொடா்ந்து, பதினெட்டாம்படி கருப்பா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் சேவல், கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க

உள்ளூா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி, மக்கள் பாதுகாப்பு பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகம் முன் காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குடிநீா் கோரி கிராம பெண்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், குதுகுளத்தூா் வட்டம், கீழக் கொடுமலூா் ஊராட்சி, தட்ட... மேலும் பார்க்க

கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மீட்பு

கடலாடியில் திங்கள்கிழமை கழிப்பறைத் தொட்டியில் விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையின் மீட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் வட்டார புள்ளியியல் துறை அலுவலகம் உள்ளது. ... மேலும் பார்க்க

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை கடலுக்குள் மூழ்கடிக்க இலங்கை அரசு திட்டம்

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 123 விசைப்படகுகளை மீன்கள் வளா்ப்புக்காக கடலுக்குள் மூழ்கடிக்கவிருப்பதாக இலங்கை கடல் தொழில் நீரியல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

ஊரை விட்டு விலக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

முதுகுளத்தூா் கொழுந்துரை கிராமத்தில் 13 குடும்பங்களை சோ்ந்த 50- க்கும் மேற்பட்டவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் ... மேலும் பார்க்க