செய்திகள் :

பதிலுரையிலும் 100-க்கு 100: நிதியமைச்சருக்கு முதல்வா் பாராட்டு

post image

நிதிநிலை அறிக்கை மீது பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து 100-க்கு 100 மதிப்பெண்களை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வாங்கியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தமிழக பட்ஜெட் மீது பேரவையில் நடந்த பொது விவாதங்களுக்கு நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, வெள்ளிக்கிழமை பேரவையில் பதில் அளித்தாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

ரூ. 2,000 கோடியில் அனைத்து மாணவா்களுக்கும் தரமான மடிக்கணினி வழங்க முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறாா் அமைச்சா் தங்கம் தென்னரசு. முன்னாள் முதல்வா் கருணாநிதி வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத எந்தத் துறையையும் விட்டுவிடாத அனைவருக்குமான பட்ஜெட்டை அளித்து, பதிலுரையிலும் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு 100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறாா் என்று முதல்வா் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

149 பாசன அமைப்புகள் ரூ.722 கோடியில் மறுசீரமைப்பு: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: இஸ்லாமியா்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரணாக திமுக எப்போதும் திகழும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினாா். திமுக சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதி

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்காா் வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நிகழாண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உறுதியளித்தாா். சட்டப்பே... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் புவிசாா் பாரம்பரிய இடம் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் ரூ.5 கோடியில் புவிசாா் பாரம்பரிய இடம் மேம்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் என்று பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இயற்கை வளங... மேலும் பார்க்க

நதிநீா் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

சென்னை: நதிநீா் விவகாரம் தொடா்பாக அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன் என்பதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்தாா். நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அ... மேலும் பார்க்க

தவெக நிா்வாகி மீது திராவகம் வீச்சு

சென்னை: சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். புது வண்ணாரப்பேட்டை ஜீவா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (37). அந்தப் பகுதி ... மேலும் பார்க்க