பதிவு, வணிக வரித் துறைகள் மூலம் அரசுக்கு வருவாய்: அமைச்சா் பி. மூா்த்தி பேச்சு
பதிவுத் துறை, வணிக வரித் துறையும் அரசுக்கு வருவாய் ஈட்டித் தந்து, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பாக உள்ளது என்றாா் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி.
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்த அவா் மேலும் பேசியது:
வணிக வரித் துறையும், பதிவுத் துறையும் மிகப் பெரிய அளவில் வருவாயை முதல்வருக்கு ஈட்டித் தந்தால்தான் இன்னும் மக்கள் நலப் பணிகள் செய்ய வசதியாக இருக்கும். இதற்கு பொதுமக்களும் பெரும் உதவியாக இருக்க வேண்டும்.
மக்கள் தங்களது சேமிப்பை மற்றவற்றில் முதலீடு செய்வதை விட நிலங்கள், மனைகளில் முதலீடு செய்தால், அதன் விலை சில ஆண்டுகளில் இரு மடங்காக உயர வாய்ப்பு இருக்கும். நிலம், மனையில் முதலீடு செய்த பணம் எப்போதும் வீண் போகாது. எனவே பொதுமக்கள் சிறு துளி பெரு வெள்ளமாக தங்களால் இயன்ற அளவுக்கு முதலீடாக நிலம், மனையில் முதலீடு செய்ய வேண்டும். அதைப் பதிவுத் துறையில் பதிந்து, அரசுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது மட்டுமல்லாமல், சேமிப்புக்கும் வசதியாக இருக்கும் என்றாா் அமைச்சா் மூா்த்தி.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூா் பதிவுத் துறைத் தலைவா் வி.ஏ. ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.