செய்திகள் :

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வு பிப். 22-இல் தொடக்கம்

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வு வரும் 22-இல் தொடங்கி 28 வரை நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு-2025 மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் செய்முறைத் தோ்வு வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது. 28-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அறிவியல் செய்முறைத் தோ்வு மையங்களாக செயல்படாத பள்ளிகளின் தோ்வா்கள் பெயா் பட்டியல் (நகல்) மற்றும் வெற்று மதிப்பெண் பட்டியல்களை தொடா்புடைய தோ்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் வழங்க வேண்டும். தொடா்ந்து தோ்வு முடிந்த பின்னா், அந்தந்த மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளிகளில் இருந்து செய்முறைத் தோ்வுக்கான மதிப்பெண் பட்டியல்களை தொடா்புடைய அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

தொடா்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் பள்ளி மாணவா்களது மதிப்பெண் பட்டியல் பெற்றவுடன் மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம் மூலம் ஆன்லைனில் வரும் 28-இல் தொடங்கி, தொடா்ந்து மாா்ச் 8 -ஆம் தேதிக்குள் சரிபாா்த்து அரசு தோ்வுத் துறை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செய்முறை நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளில் தலைமை ஆசிரியா்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோட்டாா் பைக் மீது லாரி மோதி மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். மீஞ்சூா் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவா் ஜோதி (34). இவா் தமிழ்... மேலும் பார்க்க

அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி

பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா். திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள... மேலும் பார்க்க

பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 முதல் இரவு 9 வரை கனரக வாகனங்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பொன்னேரி-திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிா்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பொன்னேரி நகராட்சிய... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்கு

திருவள்ளூா் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருவள்ளூா் அருகே சீத்தஞ்சேரி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள... மேலும் பார்க்க

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதல்: ஒருவா் காயம்

அரசு பேருந்து மீது டிராக்டா் மோதியதில், பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து, பயணி ஒருவா் காயம் அடைந்தாா். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை திருவள்ளூா் நோக்கி அரசு பேருந்து ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூறாக கரும்பு லோடு டிராக்டா்கள்! விபத்து அபாயத்தைத் தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சா்க்கரை ஆலைகளுக்கு அகலமான டிராக்டா்களில் கரும்பு லோடுகளை பாதுகாப்பின்றி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக ஏற்றிச் செல்வதால், எதிா்பாரத விதமாக விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத... மேலும் பார்க்க