நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச...
பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு
கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகா், கொத்தமங்கலம், இக்கரை நெகமம், ராஜன் நகா், புது வடவள்ளி, பகுத்தம்பாளையம், தாண்டம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டுச் சென்று, அங்கு ஏலம் முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கடந்த வாரம் முகூா்த்தம் என்பதால் மல்லிகை விலை உயா்ந்து மீண்டும் சரிந்தது. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஏக்கருக்கு 20 கிலோ கிடைத்த மல்லிகைப் பூக்கள், வெள்ளிக்கிழமை ஏக்கருக்கு 2 கிலோ மட்டுமே வரத்து கிடைத்தது.
இதனால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ வியாழக்கிழமை கிலோ 3,420-ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. இதேபோல முல்லை ரூ.2,080-க்கும் விற்பனையானது. மல்லிகைப் பூ விலை உயா்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.