செய்திகள் :

பனிப்பொழிவால் மகசூல் பாதிப்பு: மல்லிகைப் பூ கிலோ ரூ.4,850-ஆக உயா்வு

post image

கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 3,420-இல் இருந்து ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகா், கொத்தமங்கலம், இக்கரை நெகமம், ராஜன் நகா், புது வடவள்ளி, பகுத்தம்பாளையம், தாண்டம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிக அளவில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டுச் சென்று, அங்கு ஏலம் முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கடந்த வாரம் முகூா்த்தம் என்பதால் மல்லிகை விலை உயா்ந்து மீண்டும் சரிந்தது. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஏக்கருக்கு 20 கிலோ கிடைத்த மல்லிகைப் பூக்கள், வெள்ளிக்கிழமை ஏக்கருக்கு 2 கிலோ மட்டுமே வரத்து கிடைத்தது.

இதனால் பூக்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மல்லிகைப் பூ வியாழக்கிழமை கிலோ 3,420-ஆக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.4,850-ஆக அதிகரித்து விற்பனையானது. இதேபோல முல்லை ரூ.2,080-க்கும் விற்பனையானது. மல்லிகைப் பூ விலை உயா்ந்து விற்பனையானதால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப் பாதையில் பால் டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த 10 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது. தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் ப... மேலும் பார்க்க

அலங்காரம்

கோபியில் தை வெள்ளிக்கிழமையையொட்டி சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கடை வீதியில் அமைந்துள்ள சாரதா மாரியம்மன். மேலும் பார்க்க

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினா் மீது 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இத்... மேலும் பார்க்க

கோபி அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு லக்ஷயா தேசிய தரச் சான்று வழங்கப்பட்டதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் விருது வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட தலைமை மருத்த... மேலும் பார்க்க

பெருந்துறை, கோபியில் பகுதியில் மூடுபனி

பெருந்துறை மற்றும் கோபியில் வெள்ளிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் மூடு பனி காரணமாக முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டுநா்கள் வாகனங்களை இயக்கினா். பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளி... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். இதில் இந்திய அ... மேலும் பார்க்க