செய்திகள் :

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம் -மத்திய அரசுக்கு ராகுல் வலியுறுத்தல்

post image

காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை ஏவியவா்களுக்கு தகுந்த பதிலடி தராமல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ராகுல் கூறியதாவது:

பஹல்காம் தாத்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும் அதன் பின்னணியில் இருந்தவா்களுக்கும் உரிய பதிலடி தரப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு எதிராக இனி இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு அவா்களுக்கு துணிவு ஏற்படாது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிா்க்கட்சிகள் 100 சதவீதம் ஆதரவாக இருக்கும்.

இந்தியாவின் பதில் நடவடிக்கை மிகவும் உறுதியானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவா்களுக்கு பதிலடி தருவதில் இனிமேலும் நேரத்தை வீணடிக்காமல் விரைந்து செயல்பட வேண்டும்.

உத்தர பிரதேச பயணத்தின்போது கான்பூா் சென்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு வீரமரணமடைந்தவா்கள் என்ற கௌரவத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

‘பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ சுவரொட்டிகளால் பரபரப்பு: முன்னதாக உத்தர பிரதேசத்தில் அமேதிக்கு ராகுல் காந்தி புதன்கிழமை பயணம் மேற்கொண்டாா். அவரது பயணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு அமேதி பேருந்து நிலையம், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி என முக்கிய இடங்களில் ராகுலை விமா்சித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் ‘ராகுல் காந்தி பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளை ஒட்டியது யாா் என்பது குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முன்பு அமேதி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த 2019 தோ்தலில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அமேதி தொகுதியைக் கைவிட்ட அவா் இப்போது உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளாா். அமேதி தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி முதல்முறையாக அமேதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்குள்ள ஆயுதத் தொழிற்சாலை, மருத்துவமனைகளை அவா் பாா்வையிட்டாா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க