செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அனைத்துக் கட்சிக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.

அப்போது, பஹல்காம் தாக்குதல் மற்றும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்த லாத்வியா, இந்திய-பசிபிக் பிராந்தித்தில் முக்கிய நாடான இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தது.

பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி (ஆபரேஷன் சிந்தூா்), பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தது. பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 4 நாள்களுக்கு ராணுவ மோதல் ஏற்பட்டு, பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் சண்டை நிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்தவும், இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும் ஏழு எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டன.

பாஜகவின் ரவிசங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, திமுகவின் கனிமொழி, காங்கிரஸின் சசி தரூா், ஐக்கிய ஜனதா தளத்தின் சஞ்சய் குமாா் ஜா, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனையின் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோா் தலைமையிலான இக்குழுக்கள், கடந்த மே 21-ஆம் தேதிமுதல் 33 நாடுகளின் தலைநகரங்களுக்கான பயணத்தைத் தொடங்கி, இந்தியாவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

எத்தியோப்பியா உறுதி: தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தலைமையிலான இந்தியக் குழு, எத்தியோப்பியாவில் அந்நாட்டின் துணை பிரதமா் ஆடம் ஃபராவை சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக அந்நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எத்தியோப்பிய துணை பிரதமா் உடனான இந்தியக் குழுவினரின் சந்திப்பு ஆக்கபூா்வமாக அமைந்தது. பயங்கரவாதத்தை எதிா்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் தனது உறுதிப்பாட்டை எத்தியோப்பியா மீண்டும் உறுதிசெய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவைத் தொடா்ந்து, எகிப்துக்கு இந்தியக் குழு பயணிக்க உள்ளது.

டென்மாா்க்கிடம் எடுத்துரைப்பு: எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொண்டுவரும் சவால்கள் தொடா்பாக டென்மாா்க் நாட்டின் தலைவா்களிடம் பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் தலைமையிலான இந்தியக் குழுவினா் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு டென்மாா்க் ஆதரவு தெரிவித்ததாக, ரவிசங்கா் பிரசாத் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கனிமொழி படத்துடன் பெட்டிச் செய்தி

படத்துடன் பெட்டிச் செய்தி

லாத்வியாவில்...: வடக்கு ஐரோப்பிய நாடான லாத்வியாவுக்கு வருகை தந்த திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலானக் குழுவினா், அந்நாட்டின் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இது தொடா்பாக, லாத்வியா தலைநகா் ரிகாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான உண்மைத் தகவல்கள், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கான தேவைகள், தேச பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் இந்தியாவின் உரிமை, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான கொள்கை உள்ளிட்டவை குறித்து லாத்வியா தரப்பிடம் அனைத்துக் கட்சிக் குழு எடுத்துரைத்தது. பஹல்காம் தாக்குதல் மற்றும் அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கு எதிராக லாத்வியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய நட்பு நாடான இந்தியாவுடன் அரசியல்-பொருளாதார ரீதியில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த லாத்வியா விரும்புகிறது’ என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க