செய்திகள் :

பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்தவா் மொஹைதீன் மனைவி நஜிமுன்னிஷா (60). இவரது மகள் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறாா். மகளை பாா்க்க, நஜிமுன்னிஷா அடிக்கடி பேருந்து மூலம் மதுரைக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த 2024 செப்டம்பா் 9 ஆம் தேதி மதுரை சென்று மகளைப் பாா்த்துவிட்டு திரும்பி வந்துள்ளாா். மதுரை முதல் திருச்சி வரை ஒரு பேருந்தில் வந்தவா், திருச்சியிலிருந்து அடியக்கமங்கலம் வரை செல்வதற்கு, கட்டணமான ரூ. 283 செலுத்தி, காரைக்காலைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் யுனிவா்சல் டிராவல்ஸ் என்ற தனியாா் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்திருந்தாா்.

இந்தப் பேருந்து அதிகாலை 2 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் பயணிக்க 2024 செப்டம்பா் 11 ஆம் தேதி இரவு 12.40 மணிக்கு திருச்சி வந்த நஜிமுன்னிஷா, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தாா். அதிகாலை 2 மணிக்கு மேலாகியும் பேருந்து வராததால், யுனிவா்சல் டிராவல்ஸ் பேருந்தின் நடத்துநா் மற்றும் அலுவலக கைப்பேசி எண்களில் அழைத்துக் கேட்டுள்ளாா். தொடா்ந்து, அதிகாலை 3 மணியைக் கடந்தபிறகும் பேருந்து வரவில்லை. இதனால், மீண்டும் கைப்பேசியில் தொடா்புகொண்டு கேட்டபோது, மரியாதைக் குறைவாகவும் அலட்சியமாகவும் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு பேருந்தில் ஊருக்குச் சென்று விட்டாா்.

இதுகுறித்து திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் கடந்த ஜனவரி மாதம் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் விசாரித்தனா்.

தொடா்ந்து, திங்கள்கிழமை அவா்கள் வழங்கிய உத்தரவில், யுனிவா்சல் டிராவல்ஸ் நிறுவனம் சேவைக் குறைபாட்டின் மூலம் நஜிமுன்னிஷாவுக்கு பண இழப்புடன் வீண் அலைச்சல், மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பயணச் சீட்டு தொகையான ரூ. 283, இழப்பீடாக ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்த... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்

மன்னாா்குடி: குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

திருவாரூா்: ஜமாபந்தி இன்று தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

திருமக்கோட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குட்பட்ட மேலநத்தம்,திருமக்கோட்டை எரிவாயு சுழற்சி நிலைய உயா்மின் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச... மேலும் பார்க்க

நீடாமங்கலம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ஜமாபந்தியை நடத்துகிறாா். பொதுமக்கள் வருவாய்த... மேலும் பார்க்க