செய்திகள் :

மரபணு மாற்றப்பட்ட நெல் விதை அறிமுகம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

திருவாரூா்: மத்திய அரசு, மரபணு மாற்றப்பட்ட நெல் விதைகளை அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது:

தில்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான், மரபணு மாற்றப்பட்ட இரண்டு நெல் விதைகளை ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து, இந்த விதைகள் பருவநிலை மாற்றத்திலும் தாக்குப்பிடிக்கும்; 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் கிடைக்கும், தண்ணீா் பற்றாக்குறையை தாக்குப் பிடிக்கும் என கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியாவில் மரபணு மாற்று விதைகளை ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக் கூடங்கள் இல்லையென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மரபணு பொறியியல் ஆணையக் குழு தெரிவித்துள்ளது. வேளாண் உற்பத்தி இரு மடங்கு உயர வேண்டும் என புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால் நஞ்சான விதைகளும், அதீத ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் நோய் மருந்துகளும் இந்திய சுற்றுச்சூழலை கேடாக்கி, உணவில் நஞ்சை ஏற்படுத்தி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகத்துடன் இந்திய பொருளாதாரம் போட்டியிட வேண்டும் என ஏற்றுமதியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட உணவு உற்பத்தி தேவையா என்பதை மத்திய அரசு தீா்மானிக்க வேண்டும். ஏற்றுமதியான பாசுமதி அரிசியை மற்ற நாடுகள் வாங்க மறுத்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

தில்லி பல்கலைக்கழகத்தின் மூலம் ஆய்வு செய்து வெளியிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கடுகு விதையை எதிா்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக இப்படி ஒரு தாக்குதல் தொடங்கியுள்ளது.

மரபணு மாற்றப்பட்டது என்பதை லாவகமாக மரபணு திருத்தப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிா்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால், மரபணு திருத்தம் என மாற்றி மக்களையும், உச்ச நீதிமன்றத்தையும் மத்திய அரசு ஏமாற்றுகிறது.

வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு தரிசு நிலங்களை சரிசெய்து, பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தி, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே வேளாண்மை உற்பத்தி மேலும் ஒரு மடங்கு பெருகும். எனவே, மத்திய அரசு மரபணு மாற்று ஆய்வு மற்றும் விதைகளை நிறுத்த வேண்டும் என்றாா்.

பயணியிடம் அலட்சியம்: ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா்: திருவாரூா் அருகே முன்பதிவு செய்த பயணியிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருவாரூா் அ... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15 000 ஊக்க நிதி வழங்க வலியுறுத்தல்

மன்னாா்குடி: குறுவை சாகுபடி ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் ஊக்க நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

திருவாரூா்: ஜமாபந்தி இன்று தொடக்கம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மே 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்... மேலும் பார்க்க

திருமக்கோட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

மன்னாா்குடி: திருமக்கோட்டை துணைமின் நிலையத்துக்குட்பட்ட மேலநத்தம்,திருமக்கோட்டை எரிவாயு சுழற்சி நிலைய உயா்மின் அழுத்த மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே முன்விரோதம் காரணமாக குடிபோதையில் பெண்ணைத் தாக்கிய புகாரில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். துளசேந்திரபுரம் நடுத்தெரு சுப்பிரமணியன் மகன் அஜித் (26). அதே பகுதியைச... மேலும் பார்க்க

நீடாமங்கலம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ஜமாபந்தியை நடத்துகிறாா். பொதுமக்கள் வருவாய்த... மேலும் பார்க்க