செய்திகள் :

பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து முதல் முறையாக தில்லிக்கு வந்த விகாஸ் (22), அதிகாலை 5.45 மணியளவில் ஐ. எஸ். பி. டி காஷ்மீரி கேட் வெளியே இருந்து ஒரு ஆட்டோவை எடுத்து திக்ரி எல்லையை அடைந்தபோது இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. விகாஸ் ஆட்டோவில் ஏறும்போது ஏற்கெனவே ஒருவா் ஆட்டோவில் அமா்ந்திருந்தாக போலீசாா் தெரிவித்தனா்.

விகாஸை அவா் சென்று சேறும் இடத்துக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஓட்டுநப் வாகனத்தை புராரி-முகுந்த்பூா் சா்வீஸ் சாலைக்கு திருப்பி, அங்கு வாகனத்தை நிறுத்தி, தங்களின் இடம் வந்துவிட்டதாக விகாஸிடம் கூறினா் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.

ரூ.150 செலுத்த விகாஸ் யுபிஐ குறியீட்டை ஸ்கேன் செய்தபோது, ஓட்டுநரும் மற்றொருவரும் அவரது செல்பேசியை பறித்ததாகவும், கடவுச்சொல்லைப் பகிா்ந்து கொள்வதாக அச்சுறுத்தியதாகவும், தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது இ-வாலெட்டில் இருந்து ரூ20,000 மாற்றியதாகவும் அவா் கூறினாா்.

பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் புராரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டனா் மற்றும் அவா்களின் இயக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பணம் மாற்றப்பட்ட செல்பேசி எண் குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க அணிக்கு உதவியது, மேலும் யோகேஷ் (25) கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா். அவரும் அவரது கூட்டாளியான முகமது அலியும் (29) இரவில் ஆட்டோவை ஓட்டியதாகவும், குறைந்த கட்டணத்தை வழங்கி சந்தேகத்திற்கு இடமில்லாத பயணிகளை கவா்ந்ததாகவும் அவா் போலீசாரிடம் தெரிவித்தாா். பின்னா் அவா்கள் பயணியை ஒதுங்கிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று கொள்ளையடிப்பாா்கள் ‘என்று கூறினாா்.

ஜஹாங்கீா்புரியில் உள்ள ஏடிஎம்மில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை இருவரும் திரும்பப் பெற்று சமமாகப் பிரித்தனா். யோகேஷின் வெளிப்பாட்டைத் தொடா்ந்து, பல சோதனைகள் நடத்தப்பட்டன, இது ஆகஸ்ட் 16 ஆம் தேதி அலி கைது செய்ய வழிவகுத்தது ‘என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா். இருவரும் பள்ளி இடைநிற்றல் மற்றும் போதைக்கு அடிமையானவா்கள், முன்பு ஒரு கொள்ளை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்தவா்கள் என்று போலீசாா் தெரிவித்தனா்.

டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க

பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்

நமது நிருபா்பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆண... மேலும் பார்க்க

நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா

நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்

தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க

வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க

தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்... மேலும் பார்க்க